சென்னையில் மழை வேண்டி இசை வேள்வி
சென்னை:
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி இசை வேள்வி நடந்தது.
பிரபல வயலின் இசைக் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த இசை வேள்வியை,சென்னை ராக ஆராய்ச்சி மையமும் குன்னக்குடி சங்கீத குருகுலமும் இணைந்து நடத்தின.
காலை 10 மணி முதல் 11 மணி வரை இந்த இசை வேள்வி நடைபெற்றது.
வயலின், வீணை, தவில் இசைக் கலைஞர்கள் தங்கள் வாத்தியங்களை முழங்க, கர்நாடக சங்கீதப் பாடகர்கள், மழை வேண்டி இசைமழை பொழிந்தனர். கணபதி ஹோமம், வருண ஜபம், தேவாரம், திருப்புகழ் பாடல்கள் இந்த வேள்வியில் இடம் பெற்றன.
"இசை மூலம் தெய்வ அருளைப் பெறுவது எளிது. அதனால்தான் மழை வேண்டி இந்த இசை வேள்வி நடைபெற்றது. இசைவேள்விக்குத் தக்க பயன் கிடைத்ததாக வரலாற்றுச் சான்றுகள் உண்டு. தற்போதும் முழு நம்பிக்கையோடு இந்த இசை வேள்வியைநடத்தியிருக்கிறோம்" என்றார் குன்னக்குடி வைத்தியநாதன் கூறினார்.