For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருமாவளவனை விடுவிக்க நெடுமாறன் கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

விடுதலை சிறுத்தைகள் அமைப்புத் தலைவர் திருமாவளவனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மக்கள் உரிமைகூட்டமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை:

விடுதலை சிறுத்தைகள் அமைப்புத் தலைவர்களில் ஒருவரான முடக்கத்தான் பாண்டி கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்புதெரிவித்து விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.

இதற்கு ஊறு விளைவித்து வன்முறைக்கு வித்திட்டு விட்டனர் போலீஸார். விடுதலை சிறுத்தைகள் அமைப்பின தலைவர்திருமாவளவன் உள்பட அந்த இயக்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களை போலீஸார் கைது செய்து சிறையில்அடைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

திருமாவளவன் உள்பட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அமைதி வழியில் போராட்டங்கள் நடத்தஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.

அதேபோல் பொதுச்சொத்துக்களை நாசம் செய்து வன்முறை, கலவரங்களில் ஈடுபடுவதும் கண்டனத்திற்கு உரியது என்று அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X