சென்னை வந்த பஸ்சில் கொள்ளை
காஞ்சிபுரம்:
சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்சில் பயணிகள் போல் வேடமிட்டிருந்த 4 இளைஞர்கள் பயணிகளிடமிருந்த 50சவரன் நகையையும், ரூ 20,000ஐயும் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை அதிகாலையில்நடந்தது.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையிலிருந்து சென்னைக்கு சொகுசு பேருந்து ஒன்று 45பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
இந்த பஸ் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் பழவேலி என்ற இடத்ததை நெருங்கியபோது பஸ்சில் பயணம் செய்துகொண்டிருந்த 4 இளைஞர்கள் திடீரென எழுந்தனர். அவர்கள் கையில் துப்பாக்கி, கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தன.இவற்றை காட்டி டிரைவரை பயமுறுத்தி பஸ்சை நிறுத்த வைத்தனர்.
அதன் பின் பயணிகளை மிரட்டி 50 சவரன் நகையை பறித்துக் கொண்டனர். இது தவிர பயணிகளிடமிருந்து ரூ 20,000ஐயும்பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
டிரைவர் உள்ளிட்ட காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குற்றவாளிகளை பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications