நடுரோட்டில் தீக்குளிக்க முயன்ற காக்கிச் சட்டை!
மதுரை:
மதுரையில் நடுரோட்டில் தீக்குளிக்க முயன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்துக் கூறப்படுவதாவது:
மதுரை அண்ணாநகர் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு அரசு பஸ் மீது கல் வீசப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக அண்ணா நகர்போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள்.
அப்போது அண்ணாநகர் எஸ்.எம்.பி.காலனியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கனி பஸ் மீது கல்வீசியதாக தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீஸார் அவரை தேடி வந்தனர். எஸ்.எம்.பி.காலனிக்குச் சென்று போலீஸார் ஆட்டோ டிரைவர் கனியைச் தேடிவந்தனர்.
அப்போது கனியின் அண்ணன் ராஜசேகரன், போலீஸாருடன் தகராறு செய்தார். ராஜசேகரன் தல்லாகுளத்தில் போலீஸ்காரராகப் பணிபுரிந்துவருகிறார்.
தனது தம்பியை போலீஸார் கைது செய்வதை எதிர்த்து ராஜசேகரன் நடுரோட்டில் போராட்டத்தில் குதித்தார். அவர் மண்ணெண்ணெய்கேனுடன் நடுரோட்டுக்கு வந்து தீக்குளிக்கப் போவதாகக் கூறினார்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த மதுரை நகர போலீஸ் துணை கமிஷனர் அமல்ராஜ் மற்றும் போலீஸார் தீக்குளிக்க முயன்றபோலீஸ்காரர் ராஜசேகரனை போலீஸார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.