இது காதல் கடிதமாக இருந்திருந்தால்....

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்:

ஒரிசா மாநிலத்தில் 10 வருடங்களுக்கு முன் தபால் மூலம் அனுப்பப்பட்ட கடிதம் தற்போதுதான் உரியவரைச் சேர்ந்திருக்கிறது.

புவனேஸ்வரில் வசித்து வருபவர் பிஜான் சவுத்ரி. இவர் 1991 ம் ஆண்டு செப்டம்பர் 8 ம் தேதி தனது சகோதரிக்கு ஒரு கடிதம்அனுப்பினார்.

அவரது சகோதரி அப்போது புவனேஸ்வரிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஜகத்சிங்பூரில் வசித்து வந்தார். இந்தஊருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பப்பட்ட கடிதம் இப்போதுதான் வந்து சேர்ந்திருக்கிறது.

இந்தக் கடிதம் இந்த வருடம் ஜூன் 16 ம் தேதி சவுத்ரியின் தந்தை கயனேந்திரா கையில் கிடைத்துள்ளது.

சவுத்ரி, தன் இரு தங்கைகளுக்கும் எழுதிய இந்தக் கடிதத்தில் நன்றாகப் படிக்கும்படியும், உடம்பை நன்கு கவனித்துக்கொள்ளும்படியும் எழுதியிருந்தார்.

இந்தக் கடிதம் இவர்கள் வீட்டுக்கு வந்த போது, சவுத்ரியின் இரு சகோதரிகளும் திருமணமாகி விட்டது. தற்போது அவர்கள்இருவரும் தங்கள் கணவன் வீட்டில் வசித்து வருகிறார்கள்.

இந்தக் கடிதத்தில் பெறுநர் முகவரி தெளிவாக எழுதப்பட்டிருந்த நிலையிலும், எதற்காக 10 வருடங்கள் கழித்து உரிய இடத்தைசென்றடைந்தது என்பது புரியாத புதிராக உள்ளது.

ஆனால் இதுகுறித்து தபால் துறையினர் கூறுகையில், இந்தக் கடிதத்தில் அனுப்புனர் விலாசம் இல்லாததே இந்தத் தவறுக்குக்காரணம் என்று தெரிவித்துள்ளனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+