வீரப்பனை பிடிக்காமல் காட்டை விட்டு வரமாட்டோம்: தேவாரம்
சத்தியமங்கலம்:
இந்த முறை எப்படியும் வீரப்பனை பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதற்கேற்றார் போல் வனப்பகுதியில்வசிக்கும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம். வீரப்பனை பிடிக்காமல் காட்டை விட்டுவெளியே வரமாட்டோம் என வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்டுள்ள கூட்டு அதிரடிப்படையின் தலைவர் தேவாரம் கூறியுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் டி.ஜி.பி. தேவாரம் தலைமையில் தமிழக, கர்நாடக போலீசார் வீரப்பனை தேடும் பணியில்ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அடுத்த கட்ட திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக தமிழக, கர்நாடக அதிரடிப்படைஅதிகாரிகள் மற்றும் எல்லை பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் திங்கள் கிழமைசத்தியமங்கலத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழக அதிரடிப்படை ஐ.ஜி. விஜயகுமார், கர்நாடக அதிரடிப்படை ஐ.ஜி. கெம்பையா, எல்லை பாதுகாப்பு படைதலைமை கமாண்டண்ட் கட்டியா, டி.ஐ.ஜி தமிழச்செல்வன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆலோசனை கூட்டம் முடிந்த பின் தேவாரம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். பேட்டியின் போது அவர் கூறுகையில், வீரப்பனைபிடிப்பதற்கான முதல் கட்ட தேடுதல் வேட்டையில் 20 குழுக்களாக பிரிந்து அதிரடிப்படையினர் இதுவரை 240 கிராமங்களில்20,00க்கும் மேற்பட்ட மக்களை சந்தித்துள்ளனர்.
வீரப்பனை பிடிக்க வேண்டும் என்ற உணர்வே மக்களிடமும் நிலவி வருகிறது. ஆனாலும் அவர்கள் எங்களிடம் சில குறைகளைதெரிவித்தனர்.
அவர்கள் கோரிக்கைகள் நியாயமானவை என்பதால் அவர்கள் குறைகளை தீர்த்து வைக்க அதிரடிப்படை நடவடிக்கை எடுக்கும்.அந்த மக்களின் குறைகள் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
வீரப்பனை பிடிக்கும் விவகாரத்தில் தமிழக அதிரடிப்படைக்கும், கர்நாடக அதிரடிப்படைக்கும் இடையே எந்த விதமான கருத்துவேறுபாடும் இல்லை.
வீரப்பனை பிடிக்கும் பணியில் வனத்துறையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வீரப்பன் இருக்கும் இடம் தகவல் தெரிந்தால்அவர்கள் அதிரடிப்படையினரிடம் தெரிவிக்கலாம்.
வீரப்பனை பிடிக்கும் ஆபரேஷனுக்கு எந்தவிதமான காலவரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை. தற்போது வீரப்பனுடன் எத்தனைபேர் இருக்கின்றனர் என்பது தெரியவில்லை.
நடிகர் ராஜ்குமாரை மீட்க சென்ற மீட்பு படையினரிடம் விசாரணை செய்யப்படுமா என்பது பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது.
வீரப்பனை பிடிக்கும்வரை நாங்கள் காட்டை விட்டு வெளியே வரமாட்டோம். தேவைப்பட்டால் கோவை வனப்பகுதியிலும்தேடுதல் வேட்டை நடத்துவோம்.
வீரப்பனை தேடும் ஆபரேஷனுக்கு, ஆபரேஷன் வீரப்பன் என்றுதான் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
வீரப்பன் சரணடைய முன் வரட்டும், அதன் பின் அதை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது குறித்து யோசிக்கலாம் என்றார்.
எல்லையோர கர்நாடக போலீசார் திடீர் மாற்றம்
சத்தியமங்கல காட்டுப்பகுதிக்கு அருகில் உள்ள கர்நாடக பகுதிகளில் பணிபுரிந்து வந்த போலீஸ் அதிகாரிகள் திடீரெனமாற்றப்பட்டுள்ளனர்.
வீரப்பனை பிடிக்கும் பணியில் கர்நாடக போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிப்பதற்காக திறமையான போலீஸ் அதிகாரிகளைநியமிக்க கர்நாடக அதிரடிப்படை தலைவர் கெம்பையா முடிவு செய்துள்ளார்.
இதன்படி சத்தியமங்கலம் காட்டுப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள மைசூர், கொல்ளேகால், சாம்ராஜ்நகர் மற்றும் அதை சுற்றியுள்பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் புதிய போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.
முதல் கட்டமாக மாண்டியா டி.எஸ்.பி.. தம்மையா சாம்ராஜ் நகருக்கும், கர்நாடக போலீஸ் அகாடமியில் பணியாற்றி வந்தடி.எஸ்.பி., உத்தப்பா கொள்ளேகால் பகுதிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
ஏர்போர்ட் காவல்துறை இன்ஸ்பெக்டர் கெய்சர் அன்னூருக்கும், மண்டியா டவுன் இன்ஸ்பெக்டர் ஜெய்மாருதி சாம்ராஜ்நகர்ரூரலுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications