உ.பியில் வாடிய 16 மதுரை குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு
அலகாபாத்:
உத்தரப்பிரதேச மாநிலம் மீராப்பூரில் உள்ள பாய் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த மதுரையைச் சேர்ந்த 16குழந்தைத் தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மீராப்பூர் பாய் தயாரிக்கும் தொழிற்சாலையில் குழந்தைத் தொழிலாளர்கள் வேலை செய்து வருவது தெரிந்தவுடன் போலீஸார்அந்தத் தொழிற்சாலைக்குச் சென்று 16 குழந்தைகளையும் மீட்டனர்.
இது தொடர்பாக தொழிற்சாலை உரிமையாளரும், இன்னொருவரும் கைது செய்யப்பட்டனர். விடுவிக்கப்பட்ட குழந்தைகள்அனைவரும் 5 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள்.
விடுவிக்கப்பட்ட குழந்தைகளை விசாரித்ததில், பாய் தயாரிக்கும் தொழிற்சாலை உரிமையாளர் சுரேஷ், நல்ல வேலை தருகிறேன்என்று எங்களிடம் கூறினார்.
ஆனால் எங்களுக்கு சரியான நேரத்தில் உணவு தரவில்லை. நாங்கள் இருட்டறை ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்தோம்.உரிமையாளர்களை எதிர்த்தவர்கள் துன்புறுத்தப்பட்டனர் என்று தெரிவித்தனர்.
இவர்கள் தெஹ்சில் சதார் கொணடு வரப்பட்டுள்ளனர். உடனடியாக தங்களது சொந்த ஊரான மதுரைக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.
இவர்களில் ஒரு சிறுவர் மட்டும் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் அலகாபாத்திலுள்ளஎஸ்.ஆர்.என்.மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications