கடலூரில் அதிமுக பிரமுகர் கொலை
கடலூர்:
கடலூர் அருகே அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்டது சம்பந்தமாக 4 பேரைப் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
கடலூர் அருகே மேல்பூவணிக்குப்பத்தைச் சேர்ந்தவர் 35 வயதான கோவிந்தசாமி. இவர் அ.தி.மு.க. கிளைச்செயலாளராக இருந்து வந்தார்.
மேல்பூவணிக்குப்பத்தில், கோவிந்தசாமி உள்பட சுமார் 10 வீட்டுக்காரர்கள் அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் என்றும்,மற்றவர்கள் அனைவரும் தி.மு.கவையும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பையும் சேர்ந்தவர்கள் என்றும்கூறப்படுகிறது.
அந்த ஊரில் சில பேர் சாராயம் விற்றதையும், சமீபத்திய கலவரங்களில் பஸ்களுக்குச் சேதம் ஏற்படுத்தியதையும்பற்றி கோவிந்தசாமி போலீஸாருக்குத் தகவல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த 27 பேர் கொண்ட கும்பல், கோவிந்தசாமியின் வீட்டுக்குள் புகுந்து, கோவிந்தசாமியைக்கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் அவர் அந்த இடத்திலேயே இறந்து போனார்.
கத்திக் குத்தைத் தடுக்க முயன்ற கோவிந்தசாமியின் மனைவி லதா (30), அண்ணி சுமதி (24) மற்றும் முனியம்மாள்(50) ஆகியோரும் கத்திக் குத்துப் பட்டனர். இவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக, 4 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் தேடப்பட்டுவருகின்றனர்.












Click it and Unblock the Notifications