இளையராஜா மனைவியை கைது செய்ய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இசையமைப்பாளர் இளையராஜாவின் மனைவி ஜீவா கோர்ட் உத்தரவுப்படி கோர்ட்டில் ஆஜர் ஆகாததால்அவரைக் கைது செய்ய கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு சென்னை கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மனைவி ஜீவா, தொழிலதிபர் நிர்மல் என்பவருக்கு ரூ. 9 லட்சம் தரவேண்டியதிருந்தது. இதுதொடர்பாக செக் ஒன்றை நிர்மலிடம் ஜீவா கொடுத்துள்ளார். ஆனால் அந்த செக் வங்கியில்பணம் இல்லாததால் திரும்பி விட்டது.

இதையடுத்து சென்னை எழும்பூர் 14-வது மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில், ஜீவா தன்னை மோசடி செய்து விட்டார்என்று கூறி நிர்மல் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கோர்ட் ஜீவாவுக்குஉத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால் கோர்ட்டில் ஆஜராகாத ஜீவா எழும்பூர் கோர்ட் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தொடர்ந்தார். அந்த மனுவில் எழும்பூர் கோர்ட் உத்தரவை ரத்து செய்யுமாறு கோரியிருந்தார்.

ஆனால் எழும்பூர் கோர்ட்டில் ஆஜராகாத நிலையில் கைது உத்தரவை ரத்து செய்ய முடியாது எனவும் எழும்பூர்கோர்ட்டில் ஆஜராகுமாறும் 5 வாரக் காலக் கெடுவும் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

5 வாரம் முடிவடைந்த பின்னரும் ஜீவா கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து ஜீவாவை உடனடியாககோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு சென்னை பாண்டிபஜார் போலீஸாருக்கு எழும்பூர் கோர்ட் பிடிவாரண்ட்பிறப்பித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+