நிருபர்கள் மீது அடக்குமுறை: கருணாநிதி கடும் கண்டனம்
சென்னை:
விழுப்புரம் அரசு தானியக் கிட்டங்கிக்கு திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியுடன் சென்ற சன் டிவி நிருபர் கைதுசெய்யப்பட்டதற்கும், இது தொடர்பாக ஜெயலலிதாவிடம் மனு கொடுக்கச் சென்ற நிருபர்களை போலீசார் தாக்கியதற்கும் தமிழகமுன்னாள் முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சன் டிவி நிருபர் சுரேஷ் கைது செய்யப்பட்டது மிகவும் தவறான செயலாகும்.அவர் மீது கொலை மிரட்டல் உள்பட பல்வேறு பயங்கர குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுகண்டனத்திற்குரியது.
இது தனி மனித உரிமைகளை மீறும் செயலாகும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் கருணாநிதி.
சன் டிவி நிருபர் சுரேஷ் கைது செய்யப்பட்டதற்கு எம்.ஜி.ஆர்.அதிமுக பொதுச்செயலாளர் திருநாவுக்கரசுவும் கண்டனம்தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த 26ம் தேதி முன்னாள் அமைச்சர் பொன்முடி, விழுப்புரத்தில் அரிசி இருப்பு வைக்கப்பட்டிருந்த கிட்டங்கிக்குசோதனை செய்வதற்காகச் சென்றார்.
அவருடன் விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்களும் சென்றிருந்தனர். அங்கு இருப்பில் வைக்கப்பட்டிருந்த அரிசி எதுவுமேபுழுத்த அரிசி இல்லை என்று செய்தியாளர்களுக்கு பொன்முடி எடுத்துக் காட்டினார்.












Click it and Unblock the Notifications