புழுத்த அரிசி: 33 அலுவலர்கள் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்:
புழுத்த அரிசி புகார் தொடர்பாக திருவாரூர் மாவட்டத்தில் 33 தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளனர்.
தி.மு.க. ஆட்சியின்போது கொள்முதல் செய்யப்பட்ட அரிசியில் புழு, பூச்சிகள்தான் நிறைந்து கிடந்தன என்றும்,அவை உபயோகிக்க முடியாத புழுத்துப் போன அரிசி என்றும் 2 வாரங்களுக்கு முன்னர் முதல்வர் ஜெயலலிதாபுகார் கூறியிருந்தார்.
இது சம்பந்தமாக அவர் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கும் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, திருவாரூரில் உள்ள அரசு நுகர்பொருள் வாணிபக் கிட்டங்கிகள் மற்றும் அரிசி ஆலைகளில்,கூட்டுறவுத் துறை அமைச்சர் தனபால் மற்றும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
இதன் அடிப்படையில், இந்த மாவட்டத்தைச் சேர்ந்த 33 தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளனர் என்று நுகர்பொருள் வாணிபக் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications