சன் டிவி. நிருபர் கைது: சென்னையில் நிருபர்கள் போராட்டம்
சென்னை:
சன் டிவி நிருபர் சுரேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து முதல்வரிடம் மனு கொடுக்கமுயன்ற பத்திரிகையாளர்கள் போலீஸாரால் அப்புறப்படுத்தப்பட்டனர்.
விழுப்புரம் அரிசிக் கிட்டங்கியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி திடீர் என நுழைந்து புழுத்த அரிசி இருக்கிறதாஎன்ற சோதனையில் ஈடுபட்டார். அந்த நிகழ்ச்சியின்போது அவருடன் பல செய்தியாளர்களும்,புகைப்படக்காரர்களும் சென்றிருந்தனர். அவர்களில் சன் டிவி நிருபர் சுரேஷும் ஒருவர்.
இந் நிகழ்ச்சியையடுத்து பொன்முடி கைது செய்யப்பட்டார். அவருடன் சில திமுக பிரமுகர்களும் கைதுசெய்யப்பட்டனர். இந் நிலையில் சன் டிவி நிருபர் சுரேஷும் திடீரென கைது செய்யப்பட்டார்.
இதைக் கண்டித்து பல பகுதிகளிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் சென்னை கோட்டையில் முதல்வர்ஜெயலலிதாவைச் சந்தித்து மனுக் கொடுக்க சென்னை பத்திரிக்கை நிருபர்கள் முடிவு செய்தனர். இதற்காககாலையில் கோட்டைக்கு மனுவுடன் வந்தனர்.
ஆனால் முதல்வர் அவர்களது தீர்மானத்தைப் பெறத் தயாராக இல்லை என்று போலீஸால் மூலம்தெரிவிக்கப்பட்டது. ஆனால் கோரிக்கை மனுக் கொடுக்காமல் போக மாட்டோம் என பத்திரிக்கையாளர்கள்சார்பில் தீர்மானம் போடப்பட்டு முதல்வருக்குத் தெரிவிக்கப்பட்டது.
முதல்வர் கார் வெளியேறும் பாதையில் செய்தியாளர்கள் குவியத் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் போலீஸார்அதிக அளவில் குவிக்கப்பட்டு செய்தியாளர்களைக் கலையச் சொல்லி உத்தரவிட்டனர்.
அதற்கு மறுப்பு தெரிவித்த பத்திரிக்கையாளர்கள் முதல்வரைப் பார்க்காமல் போக மாட்டோம் எனத்திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இந் நிலையில் முதல்வர் கோட்டையிலிருந்து வெளியேறுவதற்காக கார் மூலம்வெளியே வந்தார்.
அப்போது அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் முதல்வரிடம் கோரிக்கை மனுவைக் கொடுக்க முயன்றனர். ஆனால்போலீஸார் அவர்களைத் தடுத்து அங்கிருந்து தள்ளினர். இதில் சில பத்திரிகையாளர்கள் கீழே விழுந்தனர்.
இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் வெளியில் ஓடினர். கோட்டை வாசல் அருகே சாலையில் கூடிய அவர்கள்போலீஸ் பட்ரோல் வேன்களைத் தடுத்து நிறுத்தினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. உதவி கமிஷனர் சைலேந்திர பாபு தலைமையிலானபோலீஸார் செய்தியாளர்களைச் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.
இதற்கிடையே முதல்வர் மற்றும் போலீஸ் கார்களைத் தடுத்த செய்தியாளர்களை போலீஸார் அங்கிருந்துகடுமையாகத் தள்ளி அப்புறப்படுத்தினர். இதில் சில பெண் செய்தியாளர்கள் கீழே விழுந்தனர்.
முதல்வரைச் சந்திக்க விடாமல் தங்களை போலீஸார் தடுப்பதாக கூறி சாலையில் அமர்ந்து செய்தியாளர்கள் மறியல்செய்தனர். சைலேந்திர பாபுவிடம் கடுமையாக வாதாடினர்.
செய்தியாளர்களின் இந்தப் போராட்டம் காரணமாக தலைமைச் செயலக சாலையில் சுமார் 1 மணி நேரம்பதட்டமாக இருந்தது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications