சன் டிவி. நிருபர் கைது: சென்னையில் நிருபர்கள் போராட்டம்
சென்னை:
சன் டிவி நிருபர் சுரேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து முதல்வரிடம் மனு கொடுக்கமுயன்ற பத்திரிகையாளர்கள் போலீஸாரால் அப்புறப்படுத்தப்பட்டனர்.
விழுப்புரம் அரிசிக் கிட்டங்கியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி திடீர் என நுழைந்து புழுத்த அரிசி இருக்கிறதாஎன்ற சோதனையில் ஈடுபட்டார். அந்த நிகழ்ச்சியின்போது அவருடன் பல செய்தியாளர்களும்,புகைப்படக்காரர்களும் சென்றிருந்தனர். அவர்களில் சன் டிவி நிருபர் சுரேஷும் ஒருவர்.
இந் நிகழ்ச்சியையடுத்து பொன்முடி கைது செய்யப்பட்டார். அவருடன் சில திமுக பிரமுகர்களும் கைதுசெய்யப்பட்டனர். இந் நிலையில் சன் டிவி நிருபர் சுரேஷும் திடீரென கைது செய்யப்பட்டார்.
இதைக் கண்டித்து பல பகுதிகளிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் சென்னை கோட்டையில் முதல்வர்ஜெயலலிதாவைச் சந்தித்து மனுக் கொடுக்க சென்னை பத்திரிக்கை நிருபர்கள் முடிவு செய்தனர். இதற்காககாலையில் கோட்டைக்கு மனுவுடன் வந்தனர்.
ஆனால் முதல்வர் அவர்களது தீர்மானத்தைப் பெறத் தயாராக இல்லை என்று போலீஸால் மூலம்தெரிவிக்கப்பட்டது. ஆனால் கோரிக்கை மனுக் கொடுக்காமல் போக மாட்டோம் என பத்திரிக்கையாளர்கள்சார்பில் தீர்மானம் போடப்பட்டு முதல்வருக்குத் தெரிவிக்கப்பட்டது.
முதல்வர் கார் வெளியேறும் பாதையில் செய்தியாளர்கள் குவியத் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் போலீஸார்அதிக அளவில் குவிக்கப்பட்டு செய்தியாளர்களைக் கலையச் சொல்லி உத்தரவிட்டனர்.
அதற்கு மறுப்பு தெரிவித்த பத்திரிக்கையாளர்கள் முதல்வரைப் பார்க்காமல் போக மாட்டோம் எனத்திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இந் நிலையில் முதல்வர் கோட்டையிலிருந்து வெளியேறுவதற்காக கார் மூலம்வெளியே வந்தார்.
அப்போது அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் முதல்வரிடம் கோரிக்கை மனுவைக் கொடுக்க முயன்றனர். ஆனால்போலீஸார் அவர்களைத் தடுத்து அங்கிருந்து தள்ளினர். இதில் சில பத்திரிகையாளர்கள் கீழே விழுந்தனர்.
இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் வெளியில் ஓடினர். கோட்டை வாசல் அருகே சாலையில் கூடிய அவர்கள்போலீஸ் பட்ரோல் வேன்களைத் தடுத்து நிறுத்தினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. உதவி கமிஷனர் சைலேந்திர பாபு தலைமையிலானபோலீஸார் செய்தியாளர்களைச் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.
இதற்கிடையே முதல்வர் மற்றும் போலீஸ் கார்களைத் தடுத்த செய்தியாளர்களை போலீஸார் அங்கிருந்துகடுமையாகத் தள்ளி அப்புறப்படுத்தினர். இதில் சில பெண் செய்தியாளர்கள் கீழே விழுந்தனர்.
முதல்வரைச் சந்திக்க விடாமல் தங்களை போலீஸார் தடுப்பதாக கூறி சாலையில் அமர்ந்து செய்தியாளர்கள் மறியல்செய்தனர். சைலேந்திர பாபுவிடம் கடுமையாக வாதாடினர்.
செய்தியாளர்களின் இந்தப் போராட்டம் காரணமாக தலைமைச் செயலக சாலையில் சுமார் 1 மணி நேரம்பதட்டமாக இருந்தது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications