புலிகள் மீதான தடையை நீக்கக் கோரவில்லை: யு.என்.பி.

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க நாங்கள் கோரிக்கை விடுக்கவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சிதெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சியான எங்கள் ஐக்கிய தேசிய கட்சியைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி ஆதாயம் தேடப்பார்க்கிறது சந்திரிகா அரசுஎன்றும் குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த வாரம் இலங்கையில் ஆளும்கட்சியான அதிபர் சந்திரிகாவின் மக்கள் கூட்டணியில் இடம்பெற்றிருந்த இலங்கை முஸ்லீம்காங்கிரஸ் தனது ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டது.

இதையடுத்து, சந்திரிகா அரசு தனது மெஜாரிட்டியை இழந்தது. இதே நாள் எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கேநாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார்.

முன்னதாக, அதிபர் சந்திரிகாவும், எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கேவும் சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பின்போது ரனில் விக்ரமசிங்கே, அதிபர் சந்திரிகாவிடம், விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கும்படிக் கூறியதாகபத்திரிக்கைகளில் செய்தி வெளியானது.

ஆனால் இந்த செய்திக்கு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி செய்தித்தொடர்பாளர் கருணசேனா கொடித்துவக்கு மறுப்புதெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், அதிபர் சந்திரிகாவும், ரனில் விக்ரமசிங்கேவும் இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பது குறித்தும்,அமைதி ஏற்படுத்துவது குறித்தும் மட்டுமே பேசிக் கொண்டார்கள்.

ரனில் விக்ரமசிங்கே, இலங்கையில் அமைதி ஏற்படுவதற்கு தான் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் உறுதி அளித்தார். ஆனால்அரசோ ஆதாயம் தேடும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சியைக் குற்றம்சாட்டியுள்ளது.

இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்ததும், புலிகள் மீதான தடையை நீக்குவதாக தமிழர் கட்சியான தமிழர் ஈழவிடுதலை முன்னணி அமைப்பு எம்.பி.யிடம் (டெலோ) உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் பத்திரிக்கைகளில் செய்திவெளியாகியுள்ளது. இதுவும் தவறான செய்தியாகும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+