For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தனி நீதிமன்றங்களுக்கு ஆன செலவு ரூ.3 கோடி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கடந்த 4 ஆண்டுகளில் தனி நீதிமன்றங்களுக்காக ஆன செலவு .3 கோடியைத் தாண்டியுள்ளது.

முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா அரசு செய்த ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்காக, கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.

இந்த நீதிமன்றங்களின் ஆயுள்காலம் வரும் ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், ஜெயலலிதா மீண்டும் தமிழகமுதல்வராகியுள்ளார். இதனால் தனி நீதிமன்றங்கள் நிலை என்னவாகும் என்று அனைவருடைய மனதிலும் கேள்வி எழுந்தது.

ஆனால், தனி நீதிமன்றங்களின் ஆயுள்காலத்தை நீட்டிக்குமாறு உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தது.இதைத் தொடர்ந்து, தநி நீதிமன்றங்களின் ஆயுள்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும் என்று கடந்த 2 நாட்களுக்கு முன்னர்ஜெயலலிதா அறிவித்தார்.

இதையடுத்து, தனி நீதிமன்றங்களுக்காக கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மட்டும் எவ்வளவு செலவானது என்று கேட்டு தமிழகஅரசு உயர் நீதிமன்றத்தைக் கோரியிருந்தது. உடனடியாக சிவில் நீதிமன்றத்தை நாடிய உயர் நீதிமன்றம், தனிநீதிமன்றங்களுக்கான செலவுக் கணக்கைப் பெற்று, தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும், இந்த தனி நீதிமன்றங்களுக்காக ரூ.3.03 கோடி செலவாகியுள்ளது என்று அந்தக் கணக்குதெரிவிக்கிறது.

பல்வேறு குற்றப் பத்திரிக்கைகளைத் தமிழில் மொழிபெயர்த்து நகல் எடுத்ததற்காக ரூ.36 லட்சமும், சாட்சிகளுக்கு "பேட்டா"வழங்கியது தொடர்பாக ரூ.1.5 லட்சமும் செலவாகியிருப்பதாகவும் அந்தக் கணக்கு விவரம் கூறுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X