பத்திரிக்கையாளர்கள் அனைவரும் விடுதலை
சென்னை:
சென்னையில் வெள்ளிக்கிழமை காலை கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் அனைவரும் மாலை விடுதலைசெய்யப்பட்டனர்.
சன் டி.வி. நிருபர் சுரேஷ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, வெள்ளிக்கிழமை காலை தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் முதல்வர்ஜெயலலிதாவிடம் மனு கொடுக்க பத்திரிக்கையாளர்கள் முயன்றனர். ஆனால் ஜெயலலிதா அதை வாங்க மறுத்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து, தலைமைச் செயலகம் முன்பாக அனைத்துப் பத்திரிக்கையாளர்களும் வாயில் கறுப்புத் துணியைக் கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தினார்கள்.
இதனால், தமிழகத்தின் முன்னணிப் பத்திரிகை ஆசிரியர்கள் உள்பட 150க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் அனைவருமே வேப்பேரி போலீஸ் ஸ்டேஷனில் காவலில் வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து, பல்வேறு தரப்புகளிலுமிருந்து எதிர்ப்புகள் வந்ததையடுத்து, கைது செய்யப்பட்ட அனைத்துப்பத்திரிக்கையாளர்களும் வெள்ளிக்கிழமை மாலை விடுதலை செய்யப்பட்டனர்.
முன்னதாக, புதன்கிழமை கைது செய்யப்பட்ட சன் டி.வி. நிருபர் சுரேஷும் விடுதலை செய்யப்பட்டு விட்டார்.
பத்திரிக்கையாளர்கள் அனைவரும் வரும் திங்கள்கிழமை ராஜ்பவனுக்குச் சென்று, ஆளுநர் பாத்திமா பீவியிடம், இந்தக் கைதுதொடர்பாக ஒரு மனு கொடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications