For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரப்பனிடமிருந்து கேஸட் வந்ததா?

By Super
Google Oneindia Tamil News

பெங்களூர்:

வீரப்பனிடம் இருந்து எங்களுக்கு எந்த கேஸட்டும் வரவில்லை என்று கர்நாடக காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கேதெரிவித்தார்.

பொதுமன்னிப்பு அளித்தால், தான் சரணடையத் தயாராக இருப்பதாக வீரப்பன் அனுப்பியதாகக் கூறப்படும் எந்தக் கேஸட்டும்எங்களுக்கு வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து கார்கே வெள்ளிக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:

வீரப்பன் அனுப்பியதாகக் கூறப்படும் எந்தக் கேஸட்டும் கர்நாடக அரசுக்கு இதுவரை வந்து சேரவில்லை. இது வெறும் வதந்தியே.

வீரப்பனைப் பிடிப்பதற்காக கர்நாடக, தமிழக கூட்டு அதிரடிப்படை போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் காட்டுக்குள்சென்று வீரப்பனைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

முன்னதாக, வெள்ளிக்கிழமை பெரும்பாலான பத்திரிக்கைகளில், பொதுமன்னிப்பு அளித்தால் வீரப்பன் சரணடையவிரும்புவதாகவும், இதுதொடர்பாக தமிழக-கர்நாடக மாநில அரசுகளுக்கு கேஸட் அனுப்பியுள்ளதாகவும் செய்திவெளியாகியிருந்தது. இந்தக் கேஸட் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் மூலமாக வந்ததாகவும்தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், கூட்டு அதிரடிப்படை போலீஸார் மலைவாழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்தத் தாக்குதலைத் தடுத்துநிறுத்துவதற்காகத்தான் நான் பொதுமன்னிப்பு பெற்று சரணடைய விரும்புகிறேன் என்று கேஸட்டில் வீரப்பன் பேசியிருந்ததாகவும்பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X