நேபாளத்தில் நிலச்சரிவு: 44 பேர் பலி
காட்மாண்டு:
நேபாளத்தில் இரண்டு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு 44பேர் பலியாகியுள்ளதாக நேபாள வானொலிச் செய்தி தெரிவித்துள்ளது.
தலைநகர் காட்மாண்டுவிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாடிங் மாவட்டத்தில் 5 பேர் வெள்ளித்தில்அடித்துச் செல்லப்பட்டனர். இதே மாவட்டத்தில் உள்ள சத்யதேவி கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 28 பேர்பலியானார்கள்.
அடுத்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தோரின் சடலங்களை மீட்டு விடுவதாக மாவட்ட தலைமை அலுவலர்தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் தாமாங் என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள்.
இதே போல் டொலாக்கா மாவட்டத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
துணை பிரதமர் விரைந்தார்:
நிலச்சரிவு நடந்த இடத்தை நேபாள துணை பிரதமரும், உள்துறை அமைச்சர் ராம் சந்திராவும் நேரில் சென்றுபார்வையிட்டனர். அவர்கள் மீட்புப்பணிகளைப் பார்வையிட்டனர்.
ஒவ்வொரு வருடமும், அதிக வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் நேபாளத்தில் 100 க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications