சன் - ஜெயா TV
சென்னை:
சன் டிவிக்கும், ஜெயா டிவிக்கும் இடையே புதிய போர் தொடங்கியுள்ளது.
விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் எம்.எல்.ஏவுமான பொன்முடி அரிசிக் கிட்டங்கியில் திடீர் சோதனைமேற்கொண்டு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். இதுதொடர்பாக பொன்முடி மற்றும் சில திமுகவினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் சன் டிவி நிருபர் சுரேஷும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் அந்த நிகழ்ச்சியைப் படம் பிடித்திருந்தும் சன் டிவி நிருபரை மட்டும் கைது செய்ததுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சன் டிவி நிர்வாகம் தனது நிருபரைக் கைது செய்ததைதக் கண்டித்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஊழியர்கள் கருப்புபட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
மேலும், வியாழக்கிழமை சன் டிவியில் ஒரு செய்தி ஒளிபரப்பானது. அதில், விழுப்புரம் சன் டிவி நிருபரை மட்டும் கைதுசெய்துள்ள தமிழக அரசின் ஜனநாயக படுகொலைக்கு முதல்வரிடம் உங்களது கண்டனத்தைத் தெரிவியுங்கள் என்று கூறிஜெயலலிதாவின் தொலைபேசி எண்களைக் கொடுத்தனர்.
இதற்கு ஜெயா டிவி தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை முதல் ஜெயா டிவியில் கருணாநிதியின்தொலைபேசி எண்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதில், பொதுமக்களே உங்கள் பகுதிக்கு கிருஷ்ணா நீர் வந்து விட்டதா?இல்லையென்றால் அப்படிக் கூறிய முன்னாள் தலமைச்சர் திரு.கருணாநிதியிடம் தொடர்பு கொண்டு கேளுங்கள் என்று கூறிகருணாநிதியின் 3 தொலைபேசி எண்களை கொடுத்துள்ளனர்.
சன் டிவிக்கும், ஜெயா டிவிக்கும் இடையிலான இந்த போன் போர் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.