சென்னை மத்திய சிறையில் கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

இதனால் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது என தி.மு.க. பிரச்சாரம்செய்துவந்தது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஜெயலலிதாஆண்டிப்பட்டியிலும், கிருஷ்ணகிரியிலும் வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசிநாளன்று ஜெயலலிதா சார்பில் மேலும் 2தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட.து. ஏற்கனவே ஊழல் வழக்கில்குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை வழங்கியதால் அவர் தேர்தலில் நிற்பதுகேள்விக்குறியாக இருந்தது.

2 தொகுதிகளுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டால்அவர்கள் தேரத்தலில் போட்டியிட அனுமதிக்கப்படமாட்டார்கள் என தேர்தல்ஆணைய சட்டம் கூறுகிறது.

வேட்புமனுக்கள் பரிசீல ன செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள்தள்ளுபடி செய்யப்பட்டன. அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலைமைஏற்பட்டது.

ஆனாலும் தொடர்ந்து தேர்தலில் தீவிர பிரச்சாரம் செய்துவந்தார் ஜெயலலிதா.

தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெற்றது. ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆளுனர் பதவி பிரமாணம் செய்து வைக்கக்கூடாது என தி.மு.க.கூறிவந்தது.

ஆனால் எம்.எல்.ஏக்களால் ஒருமனதாக ஜெயலலிதாவை சட்டசபை தலைவராகதேர்ந்தெடுக்கப்பட்டதால் அவருக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்ஆளுனர் பாத்திமா பீவி.

பதவி ஏற்றபின் ஜெயலலிதா கூறுகையில், யார் மீதும் பழிவாங்கும் நடவடிக்கைஎடுக்கமாட்டோம். ஆனால் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனகூறினார்.

முதலில் தேர்தல் சமயத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக முன்னாள் சட்டசபை துணைசபாநாயகரும், எம்.எல்.ஏவுமான பரிதி இளம்வழுதி கைது செய்யப்பட்டார்.

தி.மு.க, புழுத்த அரிசி வாங்கி வைத்துள்ளது. இதில் ரூ 65 கோடிவரை ஊழல்நடந்துள்ளது என குற்றம் சாட்டியது அ.தி.மு.க அரசு.

சிறையிலிருந்த முஸ்லிம்கள் கொடுமைப்படுத்தட்டார்கள் என கருணாநிதி, முன்னாள்டி.ஜி.பி., உள்துறை செயலாளர் சாந்தா ஷீலா நாயர், சிறைத்துறை அதிகாரிகள்ஆகியோர் மீதும் வழக்கு தொடரப்பட்டது.

அரசு குடோனில் அத்துமீறி நுழைந்ததாக வழக்கு பதிவு செய்தும், கொலை மிரட்டல்வழக்கிலும் முன்னாள் அமைச்சர் பொன்முடி சென்ற செவ்வாய்க்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டார்.

புதன்கிழமை சன் டிவி நிருபர் சுரேஷ் என்பவர் கொலை மிரட்டல் வழக்கில் கைதுசெய்யப்பட்டார். இதற்கு பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்புகிளம்பியது.

அவர்கள் போராட்டம் வியாழக்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரைதொடர்ந்தது.

வெள்ளிக்கிழமை காலை பேராட்டத்தில் ஈடுபட்ட நிருபர்கள் 150 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

சன் டிவி நிருபர் சுரேஷும், பொன்முடியும் நிபந்தனை ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டனர்.

தி.மு.க. தலைவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுவது பழிவாங்கும் நடவடிக்கை எனகுற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் கருணாநிதி அவரதுஇல்லத்தில் கைது செய்யப்பட்டார், சென்னையில் பாலங்கள் கட்டியதில் ஊழல்செய்ததாக கூறி அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை அடுத்தமாதம் 10ம் தேதிவரையில் சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

கருணாநிதி கைது செய்யப்பட்டது தமிழகத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+