கருணாநிதி கைது செய்யப்பட்டது துயரமானது: அத்வானி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டது மிகவும் துயரமான சம்பவமாகும் என்று மத்திய உள்துறை அமைச்சர்அத்வானி கூறியுள்ளார்.

தற்போது துருக்கியில் இருக்கும் அத்வானி கருணாநிதி கைது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

அத்வானியின் கருத்து குறித்து அவரது செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாவது:

கருணாநிதி கைது செய்யப்பட்டு அடித்து இழுத்துச் செல்லப்பட்டது ஜனநாயகத்தை மீறிய செயலாகும். தனிப்பட்ட விரோதம்காரணமாக பழிவாங்கும் நடவடிக்கைகளில் அதிமுக அரசு ஒரு போதும் இறங்கக் கூடாது.

போலீஸார் கருணாநிதியைக் கைது செய்யும்போது அவரது வயது மற்றும் உடல்நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுசெயல்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் துருக்கியிலிருந்து அத்வானி தொலைபேசி மூலம் பிரதமர் வாஜ்பாய் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்ஜஸ்வந்த் சிங் ஆகியோரிடமும் பேசினார் என்றும் கூறினார்.

முன்னதாக முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி (78) தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது எழுப்பப்பட்டு போலீஸாரால்அடித்து, இழுத்துச் செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பால்தாக்கரே கண்டனம்:

சிவசேனை தலைவர் பால்தாக்கரே கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து அவர் கூறுகையில், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். இந்தச்சம்பவம் என்னை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது.

அவரைக் கைது செய்த போலீஸ் அதிகாரிகள் அவரது வயதுக்கு மரியாதை கொடுத்திருக்க வேண்டும். அவர் முன்னாள் முதல்வர்என்பதை நினைவில் கொண்டு செயல்பட்டிருக்க வேண்டும்.

தமிழகத்தில் அதிமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு உதாரணமான சம்பவமாகும் இது. கருணாநிதி கைது செய்து இழுத்துச்செல்லப்பட்டதை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். இது மிகவும் மோசமான செயலாகும் என்றார்.

ஐ.ஏ.என்.எஸ், யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+