For Daily Alerts
Just In
சன் டிவியில் சோக கீதங்கள்..
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதி கைதுசெய்யப்பட்டதையடுத்து சன்டிவியில் தொடர்ந்து சோகப் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டுவருகின்றன.
பலே பாண்டியா படத்தில் வரும் யாரை எங்கே வைப்பது என்று வைப்பது என்று யாருக்கும் தெரியலே, பாசமலர் படத்தில்வரும் எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும், சுமை தாங்கி படத்தில் வரும் மயக்கமா கலக்கமா? மற்றும்பணமிருக்கும் மனிதனிடம் மனமிருப்பதில்லை, மனமிருக்கும் மனிதனிடம் பணமிருப்பதில்லை, நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் போன்ற பாடல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
முன்னாள் முதல்வர் கருணாநிதி அடித்து, இழுத்துச் செல்லப்பட்டதையடுத்து சன்டிவியில் தொடர்ந்து சோககீதங்கள்இசைக்கப்பட்டு வருகின்றன.
இடையிடையே கருணாநிதி கைது குறித்து தொலைபேசி மூலமான பொதுமக்களின் கருத்துக்களும் ஒளிபரப்பப்பட்டுவருகின்றன.
Comments
Story first published: Saturday, June 30, 2001, 5:30 [IST]