வேலூர் ஜெயிலுக்குச் செல்ல மாட்டேன்: கருணாநிதி போராட்டம்
சென்னை:
வேலூர் ஜெயிலுக்குக் கொண்டு சென்றால், தான் எதுவும் சாப்பிட மாட்டேன் என்று கருணாநிதி கூறியதைத்தொடர்ந்து, அவர் சென்ட்ரல் ஜெயிலிலேயே வைக்கப்பட்டுள்ளார்.
கருணாநிதி வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் கைது செய்யப்பட்டார். போலீஸார் அவரை அடித்து, இழுத்துக்கொண்டு சென்றனர்.
சனிக்கிழமை காலை அவர் சென்னை சென்ட்ரல் ஜெயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து அவரைவேலூர் ஜெயிலுக்குப் போலீஸார் கொண்டு செல்ல முயற்சி செய்தனர்.
ஆனால், வேலூருக்குக் கொண்டு சென்றால், தான் சோறு, தண்ணீர் எதுவும் சாப்பிட மாட்டேன் என்று கருணாநிதிமுரண்டு பிடித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, அவர் தற்போது சென்னை சென்ட்ரல் ஜெயிலிலேயே வைக்கப்பட்டுள்ளார்.
கருணாநிதியின் கைதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் முக்கிய திமுக பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர்.மதுரையில் மு.க. அழகிரி, மேயர் குழந்தைவேலு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தமிழக முன்னாள் தலைமைச்செயலாளரான் கே.என். நம்பியாரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னை வேளச்சேரியில் உள்ள மு.க. ஸ்டாலின் வீட்டிற்கும் போலீஸார் சென்று சோதனையிட்டனர். ஆனால்ஸ்டாலின் அங்கு இல்லாததால், அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
விரைவில் ஸ்டாலினும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. அவருடைய வீட்டைச் சுற்றிலும் போலீஸார்குவிக்கப்பட்டுள்ளதால், அங்கு திமுக தொண்டர்களும் குவிந்துள்ளனர்.