பாலுவைச் சந்திக்க வேலூர் சி றை சென்றது மத்திய அரசுக் குழு
சென்னை:
மத்திய உள்துறை சிறப்புச் செயலாளர் எம்.பி.குஷால் தலைமையிலான குழு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மத்திய சுற்றுச்சூழல்மற்றும் வனத்துறை அமைச்சர் பாலுவைப் பார்ப்பதற்காக வேலூர் சென்றுள்ளது.
தமிழகத்தில் உள்ள நிலையை ஆராய்வதற்காக மத்திய உள்துறை சிறப்புச் செயலாளர் எம்.பி.குஷால் தலைமையிலான குழுஞாயிற்றுக்கிழமை காலை சென்னை வந்தது.
இந்தக் குழு முதலில் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று மாறனை சந்தித்துப் பேசியது. நடந்த சம்பவங்கள் குறித்துகேட்டறிந்தது. பின்னர் மத்திய சிறைக்குச் சென்று கருணாநிதியை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து விரிவான விளக்கத்தைக்கேட்டறிந்தது.
இந்தக் குழுவுடன் திமுக முன்னாள் சட்ட அமைச்சர் ஆலடி அருணாவும் சென்றுள்ளார்.
கருணாநிதியைப் பார்த்தபின் இந்தக் குழு உடனடியாக வேலூர் சென்றது. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மத்தியஅமைச்சர் டி.ஆர்.பாலுவைப் பார்த்து விவரங்களைக் கேட்டறிந்த பின் இந்தக் குழு ஞாயிற்றுக்கிழமையே டெல்லி திரும்புகிறது.பின்னர் தமிழக நிலைமை குறித்து பிரதமர் வாஜ்பாய்க்கு அறிக்கை சமர்ப்பிக்கிறது இக்குழு.
இவர்களுக்காக சிறப்பு விமானம் சென்னையில் காத்துக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications