தொண்டர்களை விடுவிக்க பிரதமரிடம் திமுக எம்.பிக்கள் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ள 50,000 தி.மு.க. தொண்டர்களை உடனடியாக விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என 4தி.மு.க. எம்.பிக்கள் குழு பிரதமர் வாஜ்பாயை கேட்டுக் கொண்டது.

தி.மு.க. எம்.பிக்கள் பி.என்.சிவா, ஏ.ராஜா, சி குப்புசாமி மற்றும் வி.பி.துரைசாமி ஆகியோர் பிரதமர் வாஜ்பாயிடம் மனு ஒன்றை கொடுத்தனர்.அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறை அறைகள்நிரம்பி வழிவதால் இவர்கள் அனைவரும் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

தமிழக அரசு, 30ம் தேதியன்று 23,000 தி.மு.க. தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர் என கூறியிருந்தது. ஆனால் அது தவறு. 50,000க்கும்அதிகமான தி.மு.க. தொண்டர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

சிறையில் உள்ள தி.மு.க. தொண்டர்களுக்கு உணவோ, நீரோ கொடுக்கப்படவில்லை. அவர்களுக்கு கழிப்பறை வசதி கூட இல்லை. இதனால்தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

அரசியல் தொண்டர்கள் மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என கூறியுள்ளனர். அவர்கள் அனைவரும் உடனடியாகவிடுதலை செய்யப்பட வேண்டும் என்று வாஜ்பாயிடம் கொடுக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+