அப்பா மன உறுதியுடன் இருக்கிறார்: கருணாநிதி மகள் பேட்டி
சென்னை:
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்தி.மு.க.தலைவர் கருணாநிதியை அவரது மனைவி தயாளு அம்மாளும், மகள்கனிமொழியும் சந்தித்தனர்.
சென்னையில் பாலங்கள் கட்டியதில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு தி.மு.க.தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டு சென்னை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருணாநிதியைப்பார்க்க திங்கள்கிழமை காலை அவரது மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி,முரசொலி மாறனின் தம்பி முரசொலி செல்வம் ஆகியோர் சிறைச்சாலைக்கு வந்தனர்.
அவர்கள் சிறை வாசலில் 1 மணி நேரம் காத்திருந்த பின்னரே கருணாநிதியை பார்க்கசிறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். கருணாநிதியை அவர்கள் 30 நிமிடம் சந்தித்துப்பேசினர்.
கருணாநிதியை சந்தித்துவிட்டு வந்த பின் கருணாநிதியின் மகள் கனிமொழிநிருபர்களிடம் கூறுகையில், என் தந்தை மிகவும் தளர்ந்து காணப்படுகிறார். ஆனால்எப்போதும் போல் மன உறுதியுடன்தான் இருக்கிறார். அவருக்கு சிறை உணவு தான்தரப்படுகிறது. அதைத்தான் அவர் சாப்பிட்டு வருகிறார்.
மேலும் நாங்கள் சிறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. பார்வையாளர்கள் கைதிகளைபார்வையிடும் பகுதியிலிருந்துதான் அவரை பார்த்தோம் என்றார்.












Click it and Unblock the Notifications