For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேம்பால ஊழல்: ஆச்சார்யலு கோர்ட்டில் ஆஜர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ரூ.12 கோடி ஊழல் நடந்தது தொடர்பாக வழக்குத் தொடர்ந்த சென்னைமாநகராட்சி ஆணையர் ஆச்சார்யலு செவ்வாய்க்கிழமை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

மேம்பால ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் என்ஜினியர் சீனிவாசன்,தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, மேம்பால ஊழல் வழக்கைத் தொடர்ந்தஆச்சார்யலு, சிபிசிஐடி டிஐஜி முகமது அலி ஆகியோர் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜராகி,மேம்பால ஊழல் வழக்குத் தொடர்பான சாட்சியங்களையும், ஆதாரங்களையும் அளிக்க வேண்டும் என்று நீதிபதிஅசோக்குமார் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, இவர்கள் இருவரும் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகி மேம்பால ஊழல் வழக்குத்தொடர்பாக தங்களிடம் உள்ள சாட்சியங்களை சமர்ப்பித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X