கருணாநிதிக்கு மினரல் வாட்டர் தரக் கூட தடை
சென்னை:
சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி தோள்பட்டை, மூட்டு வலியுடன்அவதிப்பட்டு வருகிறார்.
அவருக்கு மினரல் பாட்டில் நீர் வழங்கக் கூட அனுமதியளிக்கப்படவில்லை.
அவரை செவ்வாய்க்கிழமை சிறையில் சந்தித்துவிட்டு வந்த மக்கள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ் பா.ம.க. தலைவர் தீரன் ஆகியோர் நிருபர்களிடம்பேசினர்.
அவர்கள் கூறுகையில், நாங்கள் கருணாநிதிக்கு வழங்குவதற்காக ஒரே ஒரு மினரல் வாட்டர் பாட்டிலை கொண்டுசென்றோம். ஆனால், இதை கருணாநிதிக்கு வழங்க சட்டத்தில் இடமில்லை எனக் கூறி போலீசார் அதை பறித்துக்கொண்டனர்.
கடும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறார் கருணாநிதி. அவரை மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு கூறினோம். ஆனால், ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் அடிபட்டு சிறையில் வாடும்போதுதனக்கு மட்டும் சிகிச்சை தேவையில்லை எனக் கூறிவிட்டார்.
கருணாநிதி வருத்தப்பட்டு சொன்ன ஒரு விஷயம் காவல்துறையினரின் அடாவடி தான். எனத் ஆட்சியில் அரசுப்பணியாளர்களில் காவல்துறையினருக்குத் தான் நிறைய செய்தேன். ஆனால், அவர்கள் என்னிடமே இப்படி நடந்துகொண்டனர் என வருத்தப்பட்டு சொன்னார் என்றனர்.