For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேலூரில் 3,000 திமுக தொண்டர்கள் விடுதலை

By Staff
Google Oneindia Tamil News

வேலூர்:

தமிழகத்தில் திங்கள்கிழமை நடந்த முழு அடைப்பையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர்சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3, 000 திமுக தொண்டர்கள் திங்கள்கிழமை இரவு விடுவிக்கப்பட்டனர்.

திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி கைது செய்யப்பட்டு அடித்து, இழுத்துச்செல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதையொட்டி, தமிழகத்தில் சென்னை, மதுரை உள்பட முக்கிய நகரங்களில் திமுக தொண்டர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

திங்கள்கிழமை மாலை 6 மணியுடன் பந்த் முடிவடைந்ததையடுத்து மாநிலம் முழுவதும் சிறையில்அடைக்கப்பட்டிருந்த திமுக தொண்டர்களை சம்பந்தப்பட்ட போலீஸார் விடுதலை செய்து வருகின்றனர்.

முன்னதாக, கருணாநிதி கைது செய்யப்படும்போது, அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்ததுதொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறனும்,டி.ஆர்.பாலுவும் தங்கள் மேல் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற்றால்தான் சிறையிலிருந்துவெளியேறுவோம் என்று பிடிவாதமாகக் கூறியுள்ளனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை கருணாநிதி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல்செய்யப்படும் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X