கைகளில் காயம்: கருணாநிதி அழுதார்
சென்னை:
நான் எத்தனையோ கடிதங்கள் எழுதியிருக்கிறேன். முரசொலிக்கு தினந்தோறும் கடிதம் எழுதியிருக்கிறேன்.ஆனால், போலீஸ் தாக்கியதால் காயமடைந்த என்னால் இன்று உள்துறைச் செயலாளருக்கு கூட ஒரு கடிதம் எழுதமுடியவில்லை எனக் கூறி கருணாநிதி அழுதார்.
புதன்கிழமை மாலை மத்திய சிறையிலிருந்து விடுதலையாகி வீடு திரும்பிய கருணாநிதி இரவு 7 மணிக்குநிருபர்களைச் சந்தித்தார். மிகச் சோர்வுடன் தளர்ந்து போய் நடந்து வந்த கருணாநிதி நிருபர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது தன்னை போலீசார் தாக்கியதை விளக்கினார்.
சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி. முகம்மது அலி கையைப் பிடித்து இழுத்தார், எங்கெங்கோ அடி விழுந்தது. விலாஎலும்பிலும் அடி விழுந்தது.
வலது கையை ஒரு அளவுக்கு மேல் உயர்த்தவோ, இயக்கவோ முடியவில்லை.
எத்தனையோ கடிதம் எழுதியிருக்கும் நான் இன்று ஒரு கடிதம் கூட எழுத முடியாத அளவுக்குத்தள்ளப்பட்டுவிட்டேன் என்று கூறிக் கொண்டிருக்கும்போதே அழுதுவிட்டார்.
இதைப் பார்த்த நிருபர்களும் கூடியிருந்த தொண்டர்களும் கூட கண் கலங்கிவிட்டனர்.
பின்னர் சுதாரித்துக் கொண்டு மிக உற்சாகமாகப் பேசி நிலைமையை சகஜமாக்கினார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications