நாளை சந்திர கிரகணம்
இந்த ஆண்டின் (2001) முதல் சந்திர கிரகணம் நாளை ( 05.07.2001) நிகழ இருக்கிறது.
இந்த ஆண்டு 2 சூரிய கிரகணங்களும், 2 சந்திர கிரகணங்களும் நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் சூரிய கிரகணம் சென்ற மாதம் (21.06.2001) நிகழ்ந்தது. இது இந்தியாவில் தெரியவில்லை.
அடுத்த சூரியகிரகணம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி (14.12.2001) நிகழ உள்ளது. இதுவும் இந்தியாவில் தெரியாது.
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நாளை நிகழ உள்ளது. இது இந்தியாவில் தெரியும்.
இரண்டாவது சந்திர கிரகணம் இந்த ஆண்டு, டிசம்பர் மாதம் 30ம் தேதி (30.12.2001) நிகழ உள்ளது. ஆனால், இது இந்தியாவில் தெரியாது.
சூரியன், பூமி, நிலா ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் சந்திரனின் மீது விழுவதுதான் சந்திர கிரகணம். சந்திர கிரகணம் பவுர்ணமியின்போதுதான் நிகழும். சூரிய கிரகணம் அமாவாசையின் போது நிகழும்.
இந்த சந்திர கிரகணம் நிகழும் நேரம்: (இந்திய நேரப்படி)
ஸ்பர்சம் (சந்திரனின் ஒளி குறைய ஆரம்பிக்கும் நேரம்)- மாலை 5.40 மணி
கிரகணம் ஆரம்பம்- இரவு 7.04 மணி
மத்திமம் (கிரகணத்தின் மத்தியப் பகுதி)- இரவு 8.24 மணி
முடிவு- இரவு 9.45 மணி
மோட்சம்: இரவு 11.09 மணி
கிட்டத்தட்ட 5 மணி நேரம் இந்த கிரகணம் நீடிக்கும்.
ஸ்பர்சம் என்றால் கிரகணத்தின் ஆரம்ப நிலைக்கு முற்பட்ட நிலை. அந்த நேரம் முதலே சந்திரனின் ஒளி குறைய ஆரம்பித்துவிடும்.
முழுவதுமாக பூமியின் நிழல் சந்திரன் மீது விழ ஆரம்பிக்கும் நேரம் இரவு 7.04 மணிக்குத்தான்.
மத்திமம் என்பது சந்திர கிரகணத்தின் நடு பகுதி.
சந்திர கிரகணம் இரவு 9.45 மணிக்கு முடிவடைகிறது.இப்போது பூமி சந்திரனின் பாதையிலிருந்து விலகி விடுவதால். பூமியின் நிழல் சந்திரனின் மீதிலிருந்துபூரணமாக விலகிவிடும்.
மோட்சம் இரவு 11.09 மணி. அதாவது மீண்டும் சந்திரன் ஒளி பெற ஆரம்பிக்கும் நேரம்.
இது குறித்து காலங்காலமாக வழங்கப்பட்டு வரும் புராணக்கதையும் உண்டு. அது:
சந்திரன் அவர் செய்த பாவ காரணத்தால் அவருக்கு ராகு தோஷம் வந்துவிடுகிறது. இதனால் ராகு (பாம்பு) அவரை பிடித்து அவரை முடமாக்கநினைக்கிறார்
ஆனால் சந்திரன் பகவானை பிரார்தித்து ஸ்லோகங்கள் சொல்ல, இறைவன் சந்திரனுக்கு அருள, சந்திரனுக்கு இருந்த ராகுதோஷம் நீங்குகிறது எனகூறப்படுகிறது.
இதனால் கிரகணத்தின் போது பக்தியுடன் இறைவனை பிரார்த்தித்து வந்தால் நாம் செய்த பாவங்கள் தீரும், இறைவனின் அருள் கிடைக்கும் என்பதுநம்பிக்கை.
கிரகண காலத்தில் கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது. இது பீடை காலம் என புராணங்கள் கூறுகிறது. ஆனால், கிரகணத்தின்போது வெளியாகும் மிகபலமான கதிர்வீச்சு கர்ப்பத்தில் உள்ள சிசுக்களை பாதிக்கும் என்பதால் தான் அவர்கள் அந்த நேரத்தில் வெளியே வருவது நல்லதல்ல எனவிஞ்ஞானப்பூர்வமாகவும் கூறப்படுகிறது.
இந்த கிரகணம் மூலம், பூராடம், உத்திராடம், பரணி, பூசம் ஆகிய நட்சத்திரங்களில் பிடிப்பதால் இவர்கள் வியாழக்கிழமை காலையோ, கிரகணம்பிடிக்கும் முன்போ கோவில்களில் அர்ச்சனை செய்து பரிகாரம் செய்யலாம்.
இயலாதவர்கள் வீட்டில் பூஜை செய்து இஷ்ட தெய்வத்தை வணங்கலாம்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications