கருணாநிதிக்கு கழுத்துவலி: குடும்ப டாக்டர் கோபால்
சென்னை:
கருணாநிதிக்குக் கழுத்து வலி ஏற்பட்டிருப்பதாக அவருடைய குடும்ப டாக்டர் கோபால் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ரூ.12 கோடி ஊழல் நடந்தது தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளகருணாநிதியின் கழுத்தை அரசு பொதுமருத்துவமனை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.
இதையடுத்து கருணாநிதியை சென்னை மத்திய சிறைக்குச் சென்று சந்தித்தார் அவருடைய குடும்ப டாக்டர் கோபால்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது. அவரால் நடக்க முடியவில்லை. இரு கால்களும் வீங்கியுள்ளன.தோளில் அதிக வலி இருப்பதாகக் கருணாநிதி கூறினார். தோள்பட்டை வலியைப் போக்குவதற்காக எந்தசிகிச்சையும் மேற்கொள்ளப்படவில்லை.
அரசு டாக்டர்கள் சிறைக்குள்ளேயே கருணாநிதிக்கு போர்ட்டபிள் எக்ஸரே கருவி மூலம் சிகிச்சை அளித்தனர்.வலது தோள்பட்டை வலிக்காக அரசு மருத்துவர்கள் அவருக்கு பிஸியோதெரபி சிகிச்சை அளித்தனர்.
அவரது உடல்நிலை குறித்து அவரது குடும்ப டாக்டராகிய எனக்கு மட்டும்தான் தெரியும். ஆனால் அவரதுஉடல்நிலையைப் பரிசோதிக்க எனக்கு அனுமதி கொடுக்கவில்லை.
அரசு மருத்துவக் குழுதான் கருணாநிதியைப் பரிசோதித்தது. அந்தக் குழுவில் என்னையும் இடம்பெறச் செய்யவேண்டும் என்றார் டாக்டர் கோபால்.
ஐ.ஏ.என்.எஸ்.