சிறை முன் கல்வீச்சு... போலீஸ் தடியடி
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து,சென்னை மத்திய சிறைக்கு முன்பாக கல்வீச்சில் ஈடுபட்ட திமுக தொண்டர்களைக் கலைக்க போலீஸார் தடியடிநடத்தினர்.
திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சென்னை மத்திய சிறை முன்பாகசெவ்வாய்க்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் கூடினர்.
சிறைக்க முன் உள்ள மேம்பாலத்தில் அவர்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.
காலை 10 மணி அளவில், கருணாநிதியைப் பார்ப்பதற்காக அவரது மனைவி தயாளு அம்மாள், மகள்கள் செல்வி,கனிமொழி மற்றும் உறவினர்கள் வந்தனர்.
அப்போது திடீரென்று பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அங்கு கூடியிருந்த திமுக தொண்டர்கள் திடீரென்றுசாலைமறியலில் ஈடுபட்டனர்.
அப்போது ஏற்பட்ட பரபரப்பில் அந்த வழியே சென்று கொண்டிருந்த பஸ்கள் மீது திடீரென்று கற்கள் வீசப்பட்டன.
இதில் 2 பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. கல்வீச்சில் சென்னை அயோத்தியா குப்பத்தைச் சேர்ந்தஆரியமாலா (43), மனோகரன் ஆகியோர் தலையில் காயம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர்.












Click it and Unblock the Notifications