தெ.ஆப்ரிக்கா: சாதனை படைத்த காது கேளா இந்திய பெண்கள்
டர்பன்:
காது கேட்காத 2 தென் ஆப்பிரிக்க இந்தியப் பெண்கள் காது கேளாதவர்களுக்கான ஆசிரியர் பட்டத்தைவென்றுள்ளனர்.
டி.வி.யில் காது கேளாதவர்களுக்கான செய்தியை அனைவரும் பார்த்திருக்கலாம். ஆனால், இந்தச் செய்திகளைசைகை மூலம் "வாசி"ப்பவர்களுக்குக் காது நன்றாகக் கேட்கும். ஆனால் வெறுமனே சைகையை மட்டும் காட்டினால்நம் எத்தனை பேருக்குப் புரியும்?
காது கேளாதவர்கள் படிப்பதற்கு என்ன பாடு படுகிறார்கள் என்று இதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.ஆனால், இந்த 2 பெண்களும் காது கேளாமலேயே பட்டம் பெற்றுள்ளனர் என்றால், அது பெரும் சாதனைதானே?
விஜய்லட்சுமி கோவென்டர் மற்றும் ஆஷா உதிர் என்ற இந்த 2 பேரும் ஏற்கனவே வி.என். நாயக் என்ற பள்ளியில்ஆசிரியைகளாகத்தான் பணிபுரிந்து வருகின்றனர். தென் ஆப்பிரிக்கக் கல்லூரியில் அவர்கள் தற்போது இந்தஇளநிலை ஆசிரியர் பட்டங்களைப் பெற்றுள்ளனர்.
காது கேளாதவர்கள் இந்தப் பட்டத்தைப் பெறுவது ஒன்றும் அவ்வளவு சாதாரண விஷயமில்லையாம்.ஆசிரியர்கள் சொல்லிக் கொடுப்பதைக் கேட்டு, விளங்கிப் படிப்பதற்குள் அவர்களுக்குப் போதும் போதும்என்றாகி விடுமாம்.
ஆசிரியர்கள் சொல்லிக் கொடுப்பதை மீண்டும் இவர்களுக்குச் சொல்லி விளக்குவதற்கு இன்னொருவர் இடையில்இருப்பாராம். ஒருநாள் இந்த "இடை ஆசிரியர்" வராவிட்டாலும் போச்சு. அன்றைய படிப்பு கெட்டுவிடும். தினமும்இப்படித்தான் அவர்கள் சிரமத்துடன் பயின்று வந்தனராம்.
இப்படியே கஷ்டப்பட்டு படித்து, படித்துத்தான் இந்த 2 பேராலும் இந்தச் சாதனையைச் செய்ய முடிந்துள்ளது.பட்டம் கிடைத்ததில் இந்த 2 பேருக்கும் அவ்வளவு சந்தோஷமாம். இருக்காதே பின்னே? தென்ஆப்பிரிக்காவிலேயே காது கேளாதவர்கள் பட்டத்தை இவர்கள்தான் முதலில் பெறுகிறார்கள் என்றால் சந்தோஷம்பொங்கத்தானே செய்யும்?
ஆனால் பட்டம் பெற்றது கூட இவர்களுக்குச் சந்தோஷம் அளிக்கவில்லையாம். இந்த 2 தென் ஆப்பிரிக்கஇந்தியர்களும் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? இப்பதான் எங்களால் காது கேளாதவர்களுக்குத் தெளிவாகப்பாடம் கற்பிக்க முடியும் என்கிறார்கள்.
ஐ.ஏ.என்.எஸ்.