சந்திர கிரகணம் குறித்து புராணம் கூறுவது என்ன?
சந்திர கிரகணம் குறித்து காலங்காலமாக வழங்கப்பட்டு வரும் புராணக்கதையும் உண்டு. அது:
சந்திரன் அவர் செய்த பாவ காரணத்தால் அவருக்கு ராகு தோஷம் வந்துவிடுகிறது. இதனால் ராகு (பாம்பு) அவரை பிடித்து அவரை முடமாக்கநினைக்கிறார்.
ஆனால் சந்திரன் பகவானை பிரார்தித்து, ஸ்லோகங்கள் சொல்லவும், இறைவன் சந்திரனுக்கு அருள, சந்திரனுக்கு இருந்த ராகுதோஷம் நீங்குகிறது எனகூறப்படுகிறது.
இதனால் கிரகணத்தின் போது பக்தியுடன் இறைவனை பிரார்த்தித்து வந்தால் அவர் அவர் செய்த பாவங்கள் தீரும். இறைவன் அருளும் கிடைக்கும் எனநம்பப்படுகிறது.
கிரகண காலத்தில் கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது. இது பீடை காலம் என புராணங்கள் கூறுகிறது. ஆனால் சந்திரனின் கதிர்களின் கதிர்வீச்சில்ஏற்படும் மாற்றம் கர்ப்பிணி பெண்களை பாதிக்கும் என்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என விஞ்ஞான காரணம் கூறப்படுகிறது.