திமுக தொண்டர் தீக்குளித்து சாவு
கரூர்:
முன்னாள் முதல்வர் கருணாநிதியை விடுதலை செய்யக் கோரி புதன்கிழமை திமுக தொண்டர் ஒருவர் தீக்குளித்துஇறந்தார்.
கரூர் அருகே நல்லமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் காளிமுத்து (28). இவர் ஒரு திமுக பிரமுகர். திமுகவின் தீவிரஉறுப்பினரான இவர், கருணாநிதி மீது அளவு கடந்த அன்பும் பற்றும் கொண்டவர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருணாநிதி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரி,திடீரென்று தன் வீட்டிலேயே தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றித் தீ வைத்துக் கொண்டார்.
பலத்த காயங்களுடன், கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் புதன்கிழமை மாலை இறந்தார். சிலமாதங்களுக்கு முன்னர்தான் இவருக்குத் திருமணம் நடந்தது.
கருணாநிதி விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதற்காகத்தான் தான் தீக்குளித்ததாக அவர் தன்னுடைய மரணவாக்குமூலத்தில் கூறியிருந்தார் அந்த திமுக தொண்டர். இறப்பதற்கு முன்னர் கரூர் நீதித்துறை நடுவர் சீதாராமன்முன்னிலையில்தான் அவர் தன்னுடைய மரண வாக்குமூலத்தை அளித்தார்.












Click it and Unblock the Notifications