மத்திய அரசின் எச்சரிக்கைக் கடிதம் 2 நாளில் வரும்
டெல்லி:
கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்த மத்திய அரசின் எச்சரிக்கைக் கடிதம் இன்னும் 2 நாட்களில்தமிழக அரசுக்கு அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.
முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் 2 மத்திய அமைச்சர்கள் கைது சம்பந்தமாக, தமிழக அரசைசெவ்வாய்க்கிழமை மாலை கூடிய மத்திய அமைச்சரவை எச்சரித்திருந்தது.
கைது செய்த போலீ"ஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு மத்திய அரசுஉத்தரவிட்டது.
இதையடுத்து, இதற்கான முறையான ஒரு எச்சரிக்கைக் கடிதத்தை அனுப்புவதற்கான பணியை மத்திய உள்துறைஅமைச்சகம் மேற்கொண்டிருந்தது. தற்போது தமிழக அரசுக்கான அந்த எச்சரிக்கைக் கடிதம் தயாராகிவிட்டது.
உள்துறை அமைச்சகத்தால் அந்தக் கடிதம் விரைவில் சரி பார்க்கப்பட்டு, இன்னும் 2 நாட்களில் அது தமிழகஅரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த எச்சரிக்கைக் கடிதம் முதல் கட்ட நடவடிக்கைதான் என்றும், தமிழக அரசு இக்கடிதத்தை ஏற்று நடக்கும்விதத்தைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய சட்ட அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications