அவசரமாகத் தரை இறங்கியது துபாய் விமானம்
ஹைதராபாத்:
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாங்காக்-துபாய் விமானம், ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேசவிமானநிலையத்தில் வியாழக்கிழமை அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
ஐக்கிய அரபு நாடுகளுக்குச் சொந்தமான இந்த விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத்தரையிறங்கியதாக ஹைதராபாத் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, ஹைதராபாத் விமானநிலைய கன்ட்ரோல் அறை அதிகாரி ஆர்.பி.சிங் கூறும்போது:
பாங்காக்கிலிருந்து துபாய் செல்லும் போயிங் 777 ரக விமானம், வியாழக்கிழமை ஹைதராபாத் அருகே வந்துகொண்டிருந்தபோது, திடீரென்று அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த விமானம்அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டவுடன் பைலட் விமானப் பயணிகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படாத வகையில்விமானத்தை உஷாராகத் தரையிறக்கினார். இந்த விமானத்தில் 350 பயணிகளும், விமான ஊழியர்களும்இருந்தனர்.
விமானப் பயணிகளுக்கு உடனடியாக மாற்று விமானம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. பயணிகளில் சிலர்மாற்று விமானத்திலும், சிலர் ஹைதராபாத்-துபாய் விமானத்திலும் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்என்றார்.
சர்வதேச விமானம் ஒன்று தொழில்நுட்பக் காரணத்தால், அவசர அவசரமாக ஹைதராபாத் விமானநிலையத்தில்தரையிறக்கப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications