புலிகளைக் கட்டுப்படுத்த சந்திரிகா புதிய வியூகம்
கொழும்பு:
இலங்கையில் அவசரகால உத்தரவு காலாவதியாகிவிட்ட நிலையில், மீண்டும் அதை நீட்டித்தால் எதிர்க்கட்சிகளின்விமர்சனத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால், புலிகளின் செயல்பாடுகளைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில்,புதிய சட்டத்தைக் கொண்டு வரத் தீர்மானித்துள்ளார் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா.
இலங்கையில் 25 மாவட்டங்கள் பதட்டம் நிறைந்த பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் அங்குசட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க போலீஸாருக்கும், ராணுவத்துக்கும் அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.பொதுமக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில் இவர்கள் சட்டம்-ஒழுங்கைக் கட்டுக்குள்வைத்திருப்பார்கள் என்று இலங்கை அரசு வியாழக்கிழமை அறிவித்தது.
இலங்கையில் அவசரகால உத்தரவு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது ஆளும்கட்சியானசந்திரிகாவின் மக்கள் கூட்டணியில் இடம்பெற்றிருந்த இலங்கை முஸ்லீம் காங்கிரஸ், தனது ஆதரவை வாபஸ்பெற்றுக் கொண்டது.
இதையடுத்து, மீண்டும் அவசரகால உத்தரவை நீட்டித்தால் எதிர்க்கட்சியினரின் விமர்சனத்துக்கு உள்ளாக நேரிடும்என்று அதிபர் சந்திரிகா கருதினார். இதற்காக, புதிய சட்டத்தின் மூலம் புலிகளின் செயல்பாடுகளைக் கட்டுக்குள்கொண்டு வருவது என்றும் அவர் தீர்மானித்தார்.
இலங்கையில் விடுதலைப்புலிகளின் செயல்பாடுகளை ஒடுக்கும் வகையில் 1983ம் ஆண்டு அவசரகால உத்தரவுபிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால், இலங்கை அரசு தங்கள் அரசியல் எதிர்க்கட்சிகளைக் கட்டுக்குள்வைத்திருக்கவும் அவசரகால உத்தரவைப் பயன்படுத்தி வந்தது.
தேர்தலை ஒத்திவைத்தல், வர்த்தக சங்கங்களை தடை செய்தல் மற்றும் பத்திரிக்கைகளுக்கு தடை விதிக்கவும் இந்தஅவசரகால உத்தரவு உபயோகப்படுத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய சட்டம்:
இதற்கிடையே பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், புலிகளின் செயல்பாடுகளைக் கட்டுக்குள்கொண்டு வரும் வகையிலும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இதன்படி, போலீஸாருக்கும், ராணுவ வீரர்களுக்கும் சட்டம்-ஒழுங்கைக் கண்காணிக்கும் வகையில் அதிக அதிகாரம்கொடுக்கப்படும்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications