புலிகளைக் கட்டுப்படுத்த சந்திரிகா புதிய வியூகம்
கொழும்பு:
இலங்கையில் அவசரகால உத்தரவு காலாவதியாகிவிட்ட நிலையில், மீண்டும் அதை நீட்டித்தால் எதிர்க்கட்சிகளின்விமர்சனத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால், புலிகளின் செயல்பாடுகளைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில்,புதிய சட்டத்தைக் கொண்டு வரத் தீர்மானித்துள்ளார் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா.
இலங்கையில் 25 மாவட்டங்கள் பதட்டம் நிறைந்த பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் அங்குசட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க போலீஸாருக்கும், ராணுவத்துக்கும் அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.பொதுமக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில் இவர்கள் சட்டம்-ஒழுங்கைக் கட்டுக்குள்வைத்திருப்பார்கள் என்று இலங்கை அரசு வியாழக்கிழமை அறிவித்தது.
இலங்கையில் அவசரகால உத்தரவு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது ஆளும்கட்சியானசந்திரிகாவின் மக்கள் கூட்டணியில் இடம்பெற்றிருந்த இலங்கை முஸ்லீம் காங்கிரஸ், தனது ஆதரவை வாபஸ்பெற்றுக் கொண்டது.
இதையடுத்து, மீண்டும் அவசரகால உத்தரவை நீட்டித்தால் எதிர்க்கட்சியினரின் விமர்சனத்துக்கு உள்ளாக நேரிடும்என்று அதிபர் சந்திரிகா கருதினார். இதற்காக, புதிய சட்டத்தின் மூலம் புலிகளின் செயல்பாடுகளைக் கட்டுக்குள்கொண்டு வருவது என்றும் அவர் தீர்மானித்தார்.
இலங்கையில் விடுதலைப்புலிகளின் செயல்பாடுகளை ஒடுக்கும் வகையில் 1983ம் ஆண்டு அவசரகால உத்தரவுபிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால், இலங்கை அரசு தங்கள் அரசியல் எதிர்க்கட்சிகளைக் கட்டுக்குள்வைத்திருக்கவும் அவசரகால உத்தரவைப் பயன்படுத்தி வந்தது.
தேர்தலை ஒத்திவைத்தல், வர்த்தக சங்கங்களை தடை செய்தல் மற்றும் பத்திரிக்கைகளுக்கு தடை விதிக்கவும் இந்தஅவசரகால உத்தரவு உபயோகப்படுத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய சட்டம்:
இதற்கிடையே பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், புலிகளின் செயல்பாடுகளைக் கட்டுக்குள்கொண்டு வரும் வகையிலும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இதன்படி, போலீஸாருக்கும், ராணுவ வீரர்களுக்கும் சட்டம்-ஒழுங்கைக் கண்காணிக்கும் வகையில் அதிக அதிகாரம்கொடுக்கப்படும்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications