பா.ம.க. விலகியதால் பாதிப்பு இல்லை: மூப்பனார்
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகியது கூட்டணிக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்மூப்பனார் கூறியுள்ளார்.
அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்த வந்த பாட்டாளி மக்கள் கட்சி அந்தகூட்டணியில் இருந்து விலகி உள்ளது.
இது குறித்து அ.தி.மு. கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்திரஸ் கட்சிதலைவர் மூப்பனார் கூறுகையில், பா.ம.க.விலகி இருப்பதால் கூட்டணிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. கூட்டணி கட்சியின் எண்ணிக்கையில் ஒன்று குறையும்அவ்வளவுதான்.
மத்திய அரசு மாநில அரசுக்கு அனுப்பி இருக்கும் நோட்டீஸ் குறித்து த.மா.காவில்விவாதம் எதுவும் நடைபெறவில்லை.
மாநிலங்களவையில் த.மா.காவுக்கு எம்.பி சீட் ஒதுக்கப்படுவது குறித்துஅ.தி.மு.கவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு நல்ல முடிவு எட்டப்படும் என்றும்அவர் நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications