வீரப்பனை தேடும் பணி தீவிரம்
மேட்டுப்பாளையம்:
தேவாரம் தலைமையில் வீரப்பனை தேடும் பணியில் ஈடுபட்டுவரும்அதிரடிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீரப்பனை பிடிப்பதற்காக முன்னாள் தமிழக டி.ஜி.பி. தேவாரம் தலைமையில் தமிழக,கர்நாடக அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது மேட்டுப்பாளையம் அருகில் அதிரடிப்படையினர் தேவாரம் மற்றும் அய்யாவுதலைமையின் கீழ் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்காக மேட்டுப்பாளையம் அருகில் அதிரடிப் படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
காந்தவயல், லிங்காபுரம் பகுதியில் அதிரடிபடையினர் தீவிர கண்காணிப்பில்ஈடுபட்டுள்ளனர். காட்டு பகுதி வழியாக வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்குஉட்படுத்தப்படுகின்றன.
வெள்ளியங்கரை மலைபகுதியிலும், அதை சுற்றியுள்ள காட்டு பகுதிகளிலும்அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு இருக்கின்றனர். அந்தப் பகுதியிலும் கண்காணிப்புதீவிரமாக நடைபெற்று வருகிறது.