கிருஷ்ண கிருஷ்ணா!
சென்னை:
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்தது திறந்து விடப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் 11ம் தேதிக்குள்சென்னைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை குடிநீர்ப் பஞ்சத்தையடுத்து கிருஷ்ணா நதியிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு ஆந்திர அரசுக்கு முதல்வர்ஜெயலலிதா உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டார்.
இதையடுத்து கடந்த 2ம் தேதி கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர் திறந்து விடப்பட்டது. கால்வாய் மூலம்இந்த தண்ணீர் தற்போது தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது. செவ்வாய்க்கிழமை காலை இந்த தண்ணீர்தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக் குப்பத்தை அடையும் என்று தெரிகிறது.
அதன் பிறகு பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து சேரும். தமிழக எல்லைக்குள் உள்ள கால்வாய் இறங்குமுகமாகஅமைந்திருப்பதால் தண்ணீர் வேகமாக வரும்.
பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்த பின்னர் அங்கிருந்து குழாய்கள் மற்றும் லாரிகள் மூலம் கீழ்ப்பாக்கம் குடிநீர்சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்படும்.
அங்கு தண்ணீர் சுத்திகரிக்கப்பட்ட பின்னர் லாரிகள் மற்றும் குழாய்கள் மூலம் சென்னை நகர மக்களுக்குவிநியோகிக்கப்படும்.