கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் ஜெ.யின் மனிதாபிமானம்
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) தலைவர் மூப்பனாரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, கூட்டணி கட்சித்தலைவர்களின் கூட்டத்தை அ.தி.மு.க. அலுவலத்தின் தரைத் தளத்திலேயே நடத்தினார் முதல்வர் ஜெயலலிதா.
அ.தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை ஜெயலலிதா திடீரென திங்கள்கிழமை கூட்டினார். இது குறித்ததகவல் கிடைத்தபோது, த.மா.கா. தலைவர் மூப்பனார் தஞ்சாவூரில் இருந்தார்.
கூட்டம் குறித்த தகவல் கிடைத்ததும், அவர் சென்னை கிளம்பி வந்தார். ஜெயலலிதா வருவதற்கு முன்பாகவே அவர்அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்து காத்திருந்தார்.
அவருக்கு சமீபத்தில் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, அவரால் படிகள் ஏற முடியாது. இதற்காகத்தான்அவரது வீட்டிலும் லிப்ட் அமைக்கப்பட்டது.
கூட்டணிக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை ஜெயலலிதா அ.தி.மு.க. அலுவலகத்தின் முதல் மாடியில் நடத்துவதுதான்வழக்கம். திங்கள்கிழமை அ.தி.மு.க அலுவகத்தில் இருந்த லிப்ட் வேலை செய்யவில்லை.
மூப்பனார் படி ஏற முடியாது என்பதை அறிந்த ஜெயலலிதா தரைத் தளத்திலேயே கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தைநடத்தினார்.












Click it and Unblock the Notifications