ராஜ்யசபை தேர்தல் அதிகாரியாக சாரங்கி நியமனம்
சென்னை:
தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி மிருத்யுங் சாரங்கியே ராஜ்யசபை எம்.பி. தேர்தல் அதிகாரியாகநியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 6 ராஜ்யசபை எம்.பிக்களுக்கான பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து, வரும் ஜூலை 23ம்தேதி இதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலுக்கு சாரங்கியே தேர்தல் அதிகாரியாக, இந்தியத் தலைமைத் தேர்தல் கமிஷனால்நியமிக்கப்பட்டுள்ளார்
தமிழக சட்டசபை சபாநாயகர் காளிமுத்து, இதற்கான பதவிப் பிரமாணத்தை சாரங்கிக்கு செவ்வாய்க்கிழமை செய்துவைத்தார்.
இதையடுத்து, காளிமுத்து நிருபர்களிடம் கூறும்போது:
ராஜ்யசபை எம்.பி. தேர்தலுக்கு சாரங்கியே தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளத வரம்பு மீறிய செயலாகும்.வழக்கமாக சட்டசபை செயலாளரோ முதன்மைச் செயலாளரோதான், இப்பதவிக்கு நியமிக்கப்படுவார்கள்.
மாநிலத் தேர்தல் அதிகாரியே தற்போது ராஜ்யசபை தேர்தலுக்கு நியமிக்கப்பட்டுள்ளது சட்டசபையின் உரிமையைக்குலைப்பதாகும்.
இதுகுறித்து, இந்தியத் தலைமைத் தேர்தல் கமிஷனிடம் நாங்கள் முறையிடுவோம் என்றார் காளிமுத்து.












Click it and Unblock the Notifications