நிருபராக மாறிய ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து, 10 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா,அதில் தன்னையே நிருபராகக் கற்பனை செய்து கொண்டு கேள்விகளை எழுப்பி அவற்றுக்குப் பதிலும்அளித்துள்ளார்.

அறிக்கையில் அவரே எழுப்பியுள்ள கேள்விகள்:

1. இதுவரை நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள எதிர்மறையான நிலைப்பாட்டை நோக்கும்போது, தமிழகத்தில் பத்திரிகைசுதந்திரத்தைத் தகர்க்க முயற்சிக்கிறீர்கள் என்பது புலனாகிறதே?

2. கருணாநிதியைக் கைது செய்ததற்குக் காரணம் என்ன?

3. கருணாநிதியைக் கைது செய்த சிபிசிஐடி அதிகாரிகள், ராஜாத்தி அம்மாள் வீட்டுக்கு வந்தபோது, பண்பாட்டுவரம்புகளை மீறி மரியாதைக் குறைவாக நடந்து கொண்டார்களா?

4. போலீஸார் கருணாநிதியைத் தாக்கியதாக சன் டி.வியும், டிஐஜி முகமது அலியை மத்திய அமைச்சர் மாறன்தாக்கியதாகப் போலீஸ் துறையும் குற்றம் சாட்டியுள்ளன. இதில் எந்தக் கூற்று உண்மையானது?

5. மத்திய காபினட் அமைச்சர் பதவி வகிக்கும் மாறன் கைது செய்யப்படுவதற்கு என்ன நியாயம் உள்ளது?

6. மற்றொரு மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு சரியான காரணங்களுக்காகத்தான் கைது செய்யப்பட்டாரா?

7. 78 வயதான நபரை நள்ளிரவில் கைது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?

8. உங்களைப் பகல் நேரத்தில் கைது செய்யும் அளவுக்கு பண்பு உள்ளவராகத்தானே கருணாநிதி இருந்துள்ளார்?

9. உங்களது போலீஸ் அதிகாரிகள் கண்ணியமான முறையில் நடந்து கொண்டதாக நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால்,தான் தாக்கப்பட்டதாகவும் அதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நேர்ந்ததாகவும் கருணாநிதிகூறியுள்ளாரே?

10. நீதிபதி ராமன் விசாரணைக் கமிஷனைப் புறக்கணிக்கப் போவதாகக் கருணாநிதி முடிவு செய்தது ஏன்?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+