நியாயமாக நடந்தால் பழிவாங்க மாட்டோம்: ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ஜெ. அறிவுரை
சென்னை:
நேர்மையான, நியாயமான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது எந்த பழிவாங்கல் நடவடிக்கையும் இருக்காதுஎன முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதனால் திட்டங்களில் அவர்கள் கவனம் செலுத்த முடியாமல் உள்ளனர். கருணாநிதி ஆட்சியில் அவருக்கு மிகநெருக்கமாக இருந்த அதிகாரிகள் எந்தப் பணியும் ஒதுக்கப்படாமல் சும்மா உட்கார வைக்கப்பட்டனர். பின்னர்இவர்களுக்கு டம்மியான பதவிகள் வழங்கப்பட்டன.
பந்தாடப்பட்டு வருவதால் அதிகாரிகள் மட்டத்தில் அரசு மீது அதிருப்தி அதிகரித்து வருவதாக செய்திகள் வரும்நிலையில் இன்று (வியாழக்கிழமை) முதல்வர் ஜெயலலிதா ஒரு அவசர அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்படும். அரசு அதிகாரிகளுக்கு நம்பிக்கையைஏற்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். கடந்த திமுக ஆட்சியில் தான் அதிகாரிகள் மீது பழிவாங்கல்கள்நடந்தன.
நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு துறையின் அதிகாரிகளையும் அழைத்து கூட்டங்கள் நடத்தி துறைகளின்செயல்பாட்டை ஆராய்ந்து வருகிறோம். பணித்தேவை இருக்கும்பட்சத்தில் தான் அதிகாரிகள் மாற்றம் இருக்கும்.
அதிகாரிகள் மத்தியில் எந்தவிதமான மன வருத்தமோ அல்லது கோபமோ இல்லை. ஆனால், சில குழப்பவாத தீயசக்திகள் தான் அதிகாரிகள் இடையே இடமாற்றம் காரணமாக மன வருத்தம் இருப்பதாக செய்திகளைப் பரப்பிவருகின்றன. அரசின் நிர்வாகத்தை குலைக்கவும் அரசின் நல்ல திட்டங்கள் மக்களுக்கு போய்ச் சேரவிடாமல்தடுக்கவும் தான் இது போன்ற புரளிகளை சில தீய சக்திகள் பரப்பி வருகின்றன.
இதற்கு அதிகாரிகள் செவி சாய்க்கக் கூடாது. உங்கள் பணியை நேர்மையாக செய்யுங்கள்.
கடந்த திமுக ஆட்சியின்போது அதிகாரிகளின் மன பலம் குறைந்துபோய் இருப்பதை தேர்தல் அறிக்கையிலேயேசுட்டிக் காட்டி இருந்தோம். அதை சரி செய்யவும் அதிகாரிகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும் நான்அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.