தமிழகப் போலீசாருக்கு சன் டி.வி. கண்டனம்
19ம் தேதி வாஜ்பாய் பேசினார். ஜம்மூ-காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. இதில் பேச்சுவார்த்தைக்கே அவசியமில்லை என்றார். ஆனால், காஷ்மீர்பிரச்சனைக்கு உரிய பகுதி என்று மீண்டும் சொன்னது பாகிஸ்தான்.
பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவின் ஆதரவும் வாஜ்பாய்க்கு கிடைத்தது. நாங்களும் பேச்சுவார்த்தையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்என ஹூரியத் கோரியது. இதை இந்தியா ஏற்க மறுத்தது. ஹூரியத்தின் கோரிக்கையை பாகிஸ்தான் ஏற்றுக் கொண்டது.
டெல்லியில் உள்ள தனது மூதாதையர்களின் வீட்டுக்கு முஷாரப் செல்ல ஆசைப்படுவதாக தகவல் வர, அங்கிருந்த தகர டின்கள், குப்பைக் கூழங்கள்அகற்றும் பணி தொடங்கியது. அந்தப் பகுதிக்கு முதல்முறையாக சாலையும் போடப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பின் அந்த வீட்டுக்கு வெள்ளை அடிக்கவும்முயற்சி எடுக்கப்பட்டது.
பாகிஸ்தானில் உள்ள 24 கட்சிகளை அழைத்து தனது இந்தியப் பயணம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார் முஷாரப். ஆனால், இதை முன்னாள் பிரதமர்கள்நவாஸ் ஷெரீப், பெனாசிர் புட்டோ ஆகியோரின் கட்சிகள் புறக்கணித்தன காஷ்மீர் குறித்து பேச வேண்டும் என தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாகிதீன்கோரிக்கை விடுத்தது.
ஆக்ரா வரும் வாஜ்பாய், முஷாரபை தங்க வைக்க அங்குள்ள 3 நட்சத்திர ஹோட்டஸ்களுக்கு இடையே போட்டு ஆரம்பம் ஆனது. ஹோட்டல்கள்அலங்கரிக்கப்பட்டன.
சிம்லா ஒப்பந்தம், வாஜ்பாயின் லாகூர் பயணத்தின்போது செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் முஷாரபுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும்என வெளியுறவுத்துறை அறிவித்தது.
சியாச்சினில் உள்ள இரு தரப்புப் படைகளையும் வாபஸ் பெற இந்தியாவுடன் ரகசிய உடன்படிக்கை ஏதும் செய்யப்படாது என முஷாரப் அறிவித்தார். பாகிஸ்தான்சிறையில் உள்ள இந்திய அமைதித் தூதர் விகாஸ் சிங்கை விடுவிப்பதாக அறிவித்தார்.
இந்தியா வரும்போது ஹூரியத் தலைவர்களை சந்திக்க பர்வேஸ் ஆர்வம் தெரிவித்தார். ஆனால், இதற்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்தது. இதையடுத்து ஹூரியத்தலைவர்கள் அவரசக் கூட்டம் நடத்தி விவகாரம் குறித்து ஆலோசித்தனர்.
இதையடுத்து இந்தியா வரும் தன்னை சந்திக்கும்படி ஹூரியத் தலைவர்களுக்கு முஷாரப் கடிதம் அனுப்பினார்.
இந்தியா வரும் பாகிஸ்தான் பிரஜைகளுக்கு எளிதில் விசா கிடைக்க வசதியாக எல்லைப் பகுதியிலேயே கவுண்டர்கள் அமைப்பதாக இந்தியா அறிவித்தது.
முஷாரபை தனியே சந்தித்துப் பேச விரும்புவதாக ஹூரியத் அமைப்பு கோரியது.
பாகிஸ்தான் தூதரகத்தில் இந்தியாவின் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுக்கும் டீ பார்ட்டி தருவதாக முஷாரப் அறிவித்தார். அந்த பார்ட்டிக்கு ஹூரியத்அமைப்புக்கும் அழைப்பு விடுத்தார். இதையடுத்து இந்த டீ பார்டியில் கலந்து கொள்ள மாட்டோம் என தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் அறிவித்தன.
பேச்சுவார்த்தையே ஒரு மோசடி தான் என பல தீவிரவாத அமைப்புகளும் அறிவித்தன.
இந்தச் சூழ்நிலையில் தான் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications