போலீசாருக்கு ஜெயலலிதா அண்டார்டிகா ஐஸ்
சென்னை:
எதற்கெடுத்தாலும் போலீஸை குறை கூறக் கூடாது என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
வியாழக்கிழமை ஸ்டார் டிவிக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:
நான் என்ன சொன்னாலும் அதற்கு உடனடியாக பதில் சொல்லி வரும் கருணாநிதி ஏன் விசாரணைக் கமிஷனைசந்திக்க பயப்பட வேண்டும். பத்திரிக்கையாளர்களிடம் பேசுவதை கமிஷனிடம் போய் நீதிபதியிடமும்சொல்லலாமே! ஏன் பயப்பட வேண்டும்?
போலீஸ் கருணாநிதி வீட்டுக்குச் சென்றபோது நடந்தது என்ன என்பது குறித்த உண்மைகளை வெளியே கொண்டுவர ஒரே வழி நீதிபதி ராமன் விசாரணைக் கமிஷன் தான். அதை ஏன் கருணாநிதி நிராகரிக்க வேண்டும்.
எதற்கெடுத்தாலும் போலீசைக் குறை கூறுவது வழக்கமாகிவிட்டது. பொது மக்கள், அரசியல்வாதிகள், குறிப்பாகபத்திரிக்கைகள் போலீசை குறை கூறுவதை வழக்கமாகவே ஆக்கிக் கொண்டு விட்டார்கள். எப்போதும் திட்டுவாங்குவது தான் போலீஸ்காரர்களின் வாழ்கையாகிவிட்டது.
கிரிமினல்களை கைது செய்வது அவர்களை சிறையில் அடைப்பது போன்ற நடவடிக்கைகளில் மட்டும் போலீசார்ஈடுபடுவதில்லை.
நம்முடைய அன்றாட வாழ்வில் அனைத்து வகையிலும் போலீசார் உதவி வருகின்றனர். சமூகத்தில் அமைதியைநிலைநாட்டி வருகிறார்கள். அவர்களின் துணை இல்லாமல் யாராவது அரசாங்கம் நடத்தி விட முடியுமா?அவர்களின் உதவியின்றி பொது மக்கள் அச்சமில்லாமல் வாழ்ந்துவிட முடியுமா?
வெள்ளம் வந்தாலும், மழை வந்தாலும், தீ பிடித்தாலும் எல்லா நேரத்திலும் அவசரத்துக்கு நாம் போலீசை தான்அழைக்கிறோம். அரசும் அவர்களை அனைத்துவிதமான பணிகளிலும் ஈடுபடுத்துகிறது. ஆனால், அவர்களுக்குபரிந்து பேச யாரும் இல்லை. எல்லோரும் போலீசை இப்படி திட்டிக் கொண்டிருந்தால் அவர்களின் மன பலம்என்ன ஆகும்?
மனபலம் இல்லாத போலீசை வைத்துக் கொண்டு சமூகத்தில் அமைதியை நிலை நிறுத்த முடியாது. அதனால் தான்நான் போலீசாரை விட்டுக் கொடுக்காமல் பேசி வருகிறேன்.
நம்மை நாகரீகமான முறையில் வாழ வைத்துக் கொண்டிருப்பவர்கள் போலீசார் தான். அவர்களை நாம் ஆதரிக்கத்தான் வேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.