For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனித உரிமை கமிஷனிடம் ஸ்டாலின் புகார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தன் வீட்டில் புகுந்து அத்துமீறி நடந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமைகமிஷனிடம் சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலின் மனு கொடுத்தார்.

மாநில மனித உரிமை கமிஷன் உறுப்பினரான நீதிபதி சாமித்துரையிடம் ஸ்டாலின் அளித்துள்ள மனுவின் விவரம்:

உச்ச நீதிமன்ற நெறிமுறைகளுக்கு மாறாக, முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் 2 மத்திய அமைச்சர்களையும்எவ்வித முகாந்திரமும் இன்றி நள்ளிரவில் அராஜகம் செய்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனால், பெங்களூர் சென்று கொண்டிருந்த நான் உடனடியாக சென்னை திரும்பி, நீதிபதி முன் சரணடைந்த பின்,கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டேன்.

ஆனால், பெங்களூரில் இருந்து சென்னை வருவதற்குள், என்னுடைய வெளச்சேரி வீட்டிற்குள் போலீசார்புகுந்தனர். என்னுடைய மனைவி, மகள், மகன் ஆகியோர் நான் பெங்களூர் சென்றிருப்பதாகக் கூறியும், போலீசார்நம்பவில்லை.

வீட்டின் பல பகுதிகளிலும் என்னைத் தேடி, வீட்டில் உள்ள பொருட்களைத் தூக்கி எறிந்துள்ளனர். இதனால் என்குடும்பத்தில் உள்ளவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர் என்பது என் மனதை மிகவும் வேதனைக்குள்ளாக்கிவிட்டது.

சென்னை நகர மேயராக மட்டுமல்ல, ஆயிரம் விளக்குத் தொகுதி சட்டசபை உறுப்பினராகவும் இருக்கும்என்னுடைய குடும்பத்தாரிடம் போலீசார் நடந்து கொண்ட முறை கண்டனத்துக்குரியது.

எனவே, தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., ஐ.ஜி., சென்னை போலீஸ் கமிஷனர், சிபிசிஐடிபோலீஸார் ஆகியோருக்கு உரிய நோட்டீசை அனுப்பி, அத்துமீறி நடந்து கொண்ட போலீஸார் மீது சட்டபூர்வமாகஉரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி, மாநில மனித உரிமை கமிஷனைக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின்அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மனுவைப் பெற்றுக் கொண்ட நீதிபதி சாமித்துரை, நிருபர்களிடம் கூறியபோது:

மனுவைப் படித்துப் பார்த்த பின்னர், விசாரணையை விரைவில் தொடங்குவோம். விசாரணையை முடிப்பதற்கானகாலக்கெடு எதுவும் கிடையாது.

மனித உரிமை மீறப்பட்டுள்ளதா என்பதை நன்கு விசாரித்து, அவ்வாறு மீறப்பட்டிருந்தால் 3 நடவடிக்கைகளுக்குசிபாரிசு செய்வோம்.

1. பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும்.

2. அரசு அல்லது தனியாரை விசாரிக்க உத்தரவிடப்படும்.

3. அரசு ஊழியர்களான போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்

என்று கூறினார் சாமித்துரை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X