மூப்பனார் மகனை எம்.பியாக்க த.மா.கா. எம்.எல்.ஏக்கள் தீர்மானம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரின் மகனான கோவிந்தவாசனை ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் நிறுத்தவேண்டும் என அக் கட்சி எம்.எல்.ஏக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து ராஜ்யபசாவுக்கு 6 எம்.பிக்களை தேர்ந்தெடுக்க வேண்டும். கட்சிகளின் பலத்தின்அடிப்படையில் அதிமுக கூட்டணிக்கு 5 எம்.பி. பதவிகள் கிடைக்கும். இதில் 4 எம்.பி. பதவிகளை எடுத்துக்கொண்ட அதிமுக ஒன்றை தமிழ் மாநில காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்தது.

அந்த ஒரு இடத்தில் போட்டி போடுவதற்கு தமிழ் மாநில காங்கிரசில் பெரிய குடுமிப் பிடி சண்டையே நடந்துவருகிறது.

இப்போதைய எம்.பியான ஜெயந்தி நடராஜனுக்கே அந்தப் பதவியை வழங்க மூப்பனார் திட்டமிட்டுள்ளார்.

ஆனால், எங்களுக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, அந்தப் பதவி ஜெயந்திக்குக் கிடைக்கக் கூடாது என்பதில்பல போட்டியாளர்களும் தெளிவாக உள்ளனர்.

தங்களுக்கு பதவி கிடைக்கப் போவதில்லை என்பதை அறிந்து கொண்ட இந்தத் தலைவர்கள் மூப்பனார் மகன்கோவிந்தவாசனுக்கே அந்தப் பதவியை வழங்க வேண்டும் எனக் கூறி வந்தனர். ஆனால், இதை மூப்பனார்நிராகரித்து வந்தார்.

இந் நிலையில் கட்சியின் மூத்தத் தலைவர்களுடன் மூப்பனார் வியாழக்கிழமை தீவிர ஆலோசனை நடத்திவருகிறார்.

மூப்பனார் ஒரு பக்கம் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், கட்சியின் எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னைராஜாஜி ஹாலில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினர். அதில் கோவிந்தவாசனையே எம்.பியாக்க வேண்டும் எனத்தீர்மானம் நிறைவேற்றிய எம்.எல்.ஏக்கள் அதை மூப்பனாருக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட நாளை தான் (வெள்ளிக்கிழமை) தான் கடைசி நாள். இதனால் போட்டியிடப்போகும் நபரை இன்று மாலையோ அல்லது நாளை காலையோ மூப்பனார் முடிவு செய்து அறிவிப்பார் எனமூப்பனாரின் இல்லத்தில் தெரிவிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+