பொய் சொல்கிறார் கருணாநிதி என்கிறார் வீரமணி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தன்னை போலீசார் தாக்கியதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறி கருணாநிதி அனுதாபம் தேடமுயற்சிக்கிறார் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறினார்.
இந் நிலையில் வியாழக்கிழமை நிருபர்களை சந்தித்தார் வீரமணி. அவர் கூறுகையில்,
போலீசார் தன்னிடம் அத்துமீறியதாக கருணாநிதி திரும்ப திரும்பக் கூறி வருகிறார். கருணாநிதி கைதுசெய்யப்பட்டபோது அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதனை செய்ய வேண்டும் எனநீதிபதி தனது ஆணையில் கூறவேயில்லை.
ஆனால், நீதிபதியின் உத்தரவில் அவ்வாறு கூறப்பட்டுள்ளதாகக் கருணாநிதி திரும்பத் திரும்பக் கூறி மக்களைகுழப்பி வருகிறார். முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் கருணநிதி. மக்களிடம் அனுதாபம் தேடத் தான் அவர்பொய்யான தகவல்களைக் கூறி வருகிறார்.
இவ்வாறு வீரமணி கூறினார்.












Click it and Unblock the Notifications